உடுமலை அருகே குமரலிங்கம் பகுதியில் துக்க வீட்டின் முன்பு நின்றிருந்தவர்கள் மீது லாரி மோதிய விபத்தில் பெண் உயிரிழப்பு

ரேஷன் பொருட்களை ஏற்றி வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து முன்னாள் சென்ற டிராக்டர் மீது மோதிய விபத்தில் துக்க வீட்டின் முன்பு நின்றிருந்த செந்தில்குமாரி என்ற பெண் லாரிக்கு அடியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த குமரலிங்கம் பகுதியில் உள்ள ஒரு துக்க வீட்டில் நேற்று உறவினர்கள் திரண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ரேஷன் பொருட்கள் ஏற்றி வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து முன்னாள் சென்ற டிராக்டர் மீது மோதியது.



அத்துடன் துக்க வீட்டு முன்னாள் நின்றிருந்த பெண்கள் மீது பயங்கரமாக மோதியது. இதில் லாரிக்கு அடியில் சிக்கிய செந்தில்குமாரி (வயது 48) என்ற பெண் பரிதாபமாக பலியானார். மேலும் பலத்த காயமடைந்த ஈஸ்வரி, சுப்புலட்சுமி ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த குமரலிங்கம் போலீசார் லாரியை ஓட்டி வந்த ஏரிப்பாளையத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவரை கைது செய்தனர். உடுமலை அருகே துக்க வீட்டில் காத்திருந்தவர்கள் மீது லாரி மோதியதில் பெண் உயிரிழந்த சம்பவம் உடுமலை பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

குமரகுரு கல்வி நிறுவனங்களில் 1,675 மாணவர்களுக்கு ₹1.6 கோடி மகாத்மா காந்தி மெரிட் ஸ்காலர்ஷிப்

குமரகுரு கல்வி நிறுவனங்களில் இன்று மகாத்மா காந்தி மெரிட் ஸ்காலர்ஷிப் விழா நடைபெற்றது. கல்வி, விளையாட்டு மற்றும் NCC ஆகிய...

கிணத்துக்கடவு: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கோவை கிணத்துக்கடவு தொகுதி பாஜகவிற்கு ஒதுக்காததை எதிர்த்து ஈச்சனாரியில் போராட்டம் நடைபெற்ற போது, தொண்டர் ஒருவர் பெட்ரோல்...

கிணத்துக்கடவு தொகுதி ஒதுக்கீட்டில் அதிருப்தி: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் ஈச்சனாரியில் சாலை மறியல் நடத்திய நிலையில், ஒரு தொண்டர் உடலில் பெட்ரோலை ஊற...

தலைவர்களின் சிலைகளை மூடியிருப்பதை அகற்றாவிட்டால் நாங்கள் அகற்றுவோம் - தந்தை பெரியார் திராவிடர் கழகம்

மாநில தேர்தல் ஆணையர் சிலைகளை மூட வேண்டாம் என்று அறிவித்த பின்னரும், அண்ணா, காமராசர், கலைஞர், MGR சிலைகள் மூடப்பட்டுள்ளன....

LPG தட்டுப்பாடு: கோவை MSME துறைக்கு கடும் சவால்

எல்பிஜி தட்டுப்பாடு, செலவு உயர்வு மற்றும் தொழிலாளர் பிரச்சினைகள் காரணமாக கோவையில் ஃபவுண்ட்ரி மற்றும் பொறியியல் MSME துறை...

MSME நிலுவைத் தொகை தாமதம்: வரிச் சலுகை பாதிப்பு

MSME நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையை தாமதித்தால் வரிச் சலுகை மறுக்கப்படும் என 43B(h) பிரிவு குறித்து பட்டய கணக்கா...