உடுமலை அருகே குமரலிங்கம் பகுதியில் துக்க வீட்டின் முன்பு நின்றிருந்தவர்கள் மீது லாரி மோதிய விபத்தில் பெண் உயிரிழப்பு

ரேஷன் பொருட்களை ஏற்றி வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து முன்னாள் சென்ற டிராக்டர் மீது மோதிய விபத்தில் துக்க வீட்டின் முன்பு நின்றிருந்த செந்தில்குமாரி என்ற பெண் லாரிக்கு அடியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த குமரலிங்கம் பகுதியில் உள்ள ஒரு துக்க வீட்டில் நேற்று உறவினர்கள் திரண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ரேஷன் பொருட்கள் ஏற்றி வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து முன்னாள் சென்ற டிராக்டர் மீது மோதியது.



அத்துடன் துக்க வீட்டு முன்னாள் நின்றிருந்த பெண்கள் மீது பயங்கரமாக மோதியது. இதில் லாரிக்கு அடியில் சிக்கிய செந்தில்குமாரி (வயது 48) என்ற பெண் பரிதாபமாக பலியானார். மேலும் பலத்த காயமடைந்த ஈஸ்வரி, சுப்புலட்சுமி ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த குமரலிங்கம் போலீசார் லாரியை ஓட்டி வந்த ஏரிப்பாளையத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவரை கைது செய்தனர். உடுமலை அருகே துக்க வீட்டில் காத்திருந்தவர்கள் மீது லாரி மோதியதில் பெண் உயிரிழந்த சம்பவம் உடுமலை பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...