வால்பாறையில் மக்களுடன் செல்ஃபி எடுத்து வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் ஈஸ்வரமூர்த்தி..!

தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு, தாவரவியல் பூங்கா, படகு இல்லம் தரம் உயர்த்த நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதிகள் வழங்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் திமுக வேட்பாளர் கே ஈஸ்வர மூர்த்தி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். வால்பாறையில் பொதுவாக ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் நேற்று தேர்தல் பிரச்சாரம் நடைபெற்றது.



குறிப்பாக, தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் அனைவரும் வால்பாறை பகுதிக்கு வருவதால் அனைத்து கட்சியினர் மக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே, திமுக வேட்பாளர் கே.ஈஸ்வரமூர்த்தி நேற்று காலை வாட்டர்பால், கருமலை, வால்பாறை, வெள்ளமலை, முடீஸ், சோலையார், கன்னி மேடு சோலையார், சோலையாறு அணை, சேக்கள்முடி ஆகிய பகுதிகளில் மக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.



அப்போது, திமுகவிற்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்றும் பாராளுமன்ற உறுப்பினராக ஆன பிறகு வால்பாறை பகுதியில் பாராளுமன்ற உறுப்பினரை சந்திக்கும் அலுவலகம் கட்டி தருவதாக தெரிவித்தார்.



மேலும், தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு, தாவரவியல் பூங்கா, படகு இல்லம் தரம் உயர்த்தவும், வால்பாறை பகுதியில் மாற்று தொழில் கொண்டு வரவும், தொழில் பயிற்சி கல்லூரி கொண்டு வருவதாகவும் வாக்குறுதிகள் வழங்கி மக்களுடன் செல்ஃபி எடுத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...