கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கில் பற்றி எரிந்த தீ கடும் போராட்டத்திற்கு பின் அணைப்பு..!

தீ விபத்து காரணமாக அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது. மேலும், சுவாசக் கோளாறு, மூச்சுத் திணறல் போன்ற பாதிப்புகளால் அப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


கோவை: கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கு 650 ஏக்கர் பரப்பளவில் அமைந்து உள்ளது. இங்கு தினமும் சுமார் 1000 டன் குப்பைகள் சேகரமாகிறது. இதில் மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டு உரம் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. ஆனாலும் டன் கணக்கில் குப்பைகள் தேங்கி கிடக்கிறது. இங்கு வெயில் காலங்களில் குப்பைகளில் அடிக்கடி தீப்பிடித்து எரிகிறது.



இந்நிலையில், குப்பை கிடங்கில் நேற்று முன்தினம் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதை அறிந்த தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று தீயை அணைக்க முயன்றனர்.



ஆனாலும் தீயை அணைக்க முடியவில்லை தொடர்ந்து புகை வந்து கொண்டே இருந்தது. இதனால் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் இருந்து 40க்கும் மேற்பட்ட வாகனங்களில் தண்ணீர் கொண்டு வரப்பட்டு தீயணைக்கும் பணி நடந்தது.



இதில் பல ஏக்கர் பரப்பளவில் டன் கணக்கில் குப்பைகள் எரிந்து சாம்பலானது.



இதனால் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் போராடி பொக்லைன் இயந்திர உதவியுடன் குப்பைகளை கிளறி தீயணைக்கப்பட்டது. தீப்பிடிக்க என்ன காரணம் என்று தெரியவில்லை. குப்பையில் மீத்தேன் வாயு உற்பத்தியாகி தானாக தீப்பிடித்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.



தீயை அணைப்பு வீரர்கள் கடும் போராட்டத்திற்கு பின் தீயை அனைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது. இதனால் சுவாசக் கோளாறு, மூச்சுத் திணறல் போன்ற பாதிப்புகளால் அந்தப் பகுதி மக்கள் அவதிப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...