தண்ணீரில் மிதந்து வந்த இறந்த ஆண் சிசுவின் உடலை அடக்கம் செய்த காங்கேயம் தனியார் அமைப்பினர்

காங்கேயத்தை சேர்ந்த‌ தனியார் சமூக தொண்டு நிறுவனம் ஒன்று தாமாக முன்வந்து இறந்த ஆண் சிசுவின் உடலை அரசு அனுமதி பெற்று சென்னிமலை சாலையில் உள்ள மின் மயானம் எதிர்புறம் உள்ள காட்டில் முழு சம்பரதாயம், சடங்குகளுடன் அடக்கம் செய்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், காங்கேயம் தாராபுரம் சாலையில் உள்ள பிஏபி கால்வாயில் பிறந்து 3 முதல் 5 நாட்களே ஆன ஆண் குழந்தையின் சிசு உடல் மிதந்து வந்தது. யாருடைய குழந்தை எங்கு இருந்து தண்ணீரில் அடித்து வரப்பட்டது என பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வரும் வேளையில் இறந்த குழந்தையின் உடல் பிரதே பரிசோதனை செய்யப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

காங்கயம்-தாராபுரம்‌ சாலையில் அமைந்துள்ள பொத்தியம்பாளையம் பிரிவில் உள்ள பிஏபி கால்வாயில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு இறந்த நிலையில் ஆண் சிசு உடல் ஒன்று மிதந்து வந்தது. இதனை தொடர்ந்து காங்கேயம் போலீஸ் இந்த குழந்தை பற்றிய விவரங்களையும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் காங்கேயத்தை சேர்ந்த‌ (பசியை போக்குவோம் ) தனியார் சமூக தொண்டு நிறுவனம் ஒன்று தாமாக முன்வந்து அந்த ஆண் சிசுவை அரசு அனுமதி பெற்று திருப்பூர் அரசு மருத்துவமனையில் இருந்து காங்கேயம் கொண்டு வந்து காங்கேயம் சென்னிமலை சாலையில் அமைந்துள்ள மின் மயானம் எதிர்புறம் உள்ள காட்டில் முழு சம்பரதாயம், சடங்குகளுடன் புதைத்தனர்.

Newsletter

Coimbatore Court Convicts Two Govt School Teachers in Forged Salary Certificate Loan Case

The CBI Special Court in Coimbatore has sentenced Krishnagiri government school teachers T. Vinothkumar and Nithilan to...

போலி சான்றிதழ் காட்டி ரூ.25.5 லட்சம் மோசடி: இரு ஆசிரியர்களுக்கு 3½ ஆண்டு சிறை

கிருஷ்ணகிரி மாவட்டம் பாப்பனூர் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டி.வினோத்குமார் மற்றும் நிதிலன் ஆகியோர் போலி சம்பளச் சான்றிதழ் க...

கோவை முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இன்று மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச்...

கோவை வீரகேரளத்தில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து: ₹2 கோடி பொருட்கள் எரிந்து சாம்பல்

கோவை வடவள்ளி அருகே வீரகேரளம் சின்மயா நகர் பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா பிளாஸ்டிக் குடோனில் மின் கசிவு காரணமாக தீ விபத்து...

கோவையில் நாளை (19.09.2026) காந்திபுரம் உள்பட பல பகுதிகளில் மின்தடை

கோவை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 19, 2026 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மண...

கோவையில் ஏ.டி.எம். கொள்ளை முயற்சி - துப்புரவு தொழிலாளியால் கைது

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 3-வது வீதியில் உள்ள கரூர் வைஸ்யா வங்கி ஏ.டி.எம். மையத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்...