மக்கள் நலத்திட்டங்கள் தொடர திமுகவுக்கு ஆதரவளிக்க வேண்டும் - தாராபுரத்தில் அமைச்சர் சாமிநாதன் பேச்சு

மக்கள் நல திட்டங்கள் தொடரவும், தொகுதி மக்களின் கோரிக்கைகள் நாடாளுமன்றத்தில் எதிரொலிக்கவும் திமுக வேட்பாளா் பிரகாஷுக்கு வாக்களிக்க வேண்டும் என்று அமைச்சர் மு.பெ.சாமிநாதம் கேட்டுக்கொண்டார்.


திருப்பூர்: தமிழகத்தில் மக்கள் நலத் திட்டங்கள் தொடரவும், தொகுதி மக்களின் கோரிக்கைகள் நாடாளுமன்றத்தில் எதிரொலிக்கவும் திமுக வேட்பாளரை ஆதரிக்க வேண்டும் என அமைச்சா் மு.பெ.சாமிநாதன் கூறினார்.

ஈரோடு தொகுதி திமுக வேட்பாளா் கே.இ.பிரகாஷுக்கு ஆதரவாக செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தாராபுரம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பிரசாரம் செய்தார்.



அப்போது அவா் பேசியதாவது, அரசுப் பள்ளிகளில் பயின்று உயா்கல்வி பயில செல்லும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் புதுமைப்பெண் திட்டம், மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து வசதி, மகளிர் சுயஉதவிக்குழுக்கள் கடன் தள்ளுபடி, நகைக்கடன் தள்ளுபடி, முதல்வரின் காலை உணவுத்திட்டம், வருமுன் காப்போம் திட்டம், மக்களைத் தேடி மருத்துவம் உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார்.

இந்த அரசு பொறுப்பேற்ற பின்பு 20 ஆண்டுகளாக காத்திருந்த விவசாயிகளுக்கு 1 லட்சம் பம்பு செட்டுகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. வேளாண்மைத் துறைக்கென தனி நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு தற்போது பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அனைத்து கிராமங்களிலும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. கட்டுமான தொழிலாளா்கள் நலவாரியத்தில் பதிவு செய்து கொண்ட தொழிலாளா்களுக்கு பல்வேறு உதவித்தொகைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

எனவே, மக்கள் நல திட்டங்கள் தொடரவும், தொகுதி மக்களின் கோரிக்கைகள் நாடாளுமன்றத்தில் எதிரொலிக்கவும் திமுக வேட்பாளா் பிரகாஷுக்கு வாக்களிக்க வேண்டும் என்றார்.

இந்நிகழ்வில் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழிசெல்வராஜ், திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் திருப்பூர் மாநகராட்சி மண்டல தலைவர் இல.பத்மநாபன், தாராபுரம் நகரச் செயலாளர் முருகானந்தம், நகர மன்ற தலைவர் பாப்புகண்ணன், கிளைக் கழக நிர்வாகிகள், நகர மன்ற உறுப்பினர்கள், கழகத்தின் இந்நாள் முன்னாள் உறுப்பினர்கள், நகர கழக நிர்வாகிகள், கழகத்தின் நிர்வாகிகள் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Newsletter

கள்ளிமடை துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை

கள்ளிமடை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் காமராஜ்...

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை அறிவிப்பு

சோமையம்பாளையம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக ஆகஸ்ட் 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வர...

கோவை பீளமேடு வார்டு 27-ல் அங்கன்வாடி மையம், தூய்மைப் பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேட்டில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் அங்கன்வாடி மையம், சாலையோர தூய்மை, குப்பை அகற...

ராகுல் காந்தி தான் 2029 பிரதமர் வேட்பாளர்; தவெகவும் ஏற்றுக்கொள்ளும்: கோவையில் அமைச்சர் ராஜேஷ்குமார்

கோவையில் நடைபெற்ற சர்வதேச சுற்றுலா மாநாட்டில் பேசிய அமைச்சர் ராஜேஷ்குமார், தமிழகத்தில் சுற்றுலாத்துறையை வேகமாக வளர்க்க ப...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் தேசியக் கொடி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்

கோயம்புத்தூரில் MY Bharat திட்டத்தின் கீழ் ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் 'ஹர் கர் திரங்கா' விழிப்புணர...

கோவை கல்லூரி மாணவர் கொலை: மேலும் ஒரு மாணவர் கைது; 6 பேருக்கு போலீஸ் வலை

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் கொலை வழக்கில் ஏற்கனவே 5 மாணவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் ஒரு மாணவரை போலீசார் க...