அதிமுக வேட்பாளரை போன்று அமெரிக்காவில் படிக்கவில்லை - தாராபுரத்தில் திமுக வேட்பாளர் பிரகாஷ் பிரச்சாரம்

தாராபுரம் சட்டமன்றத் தொகுதியில் மாதம் ஆயிரம் ரூபாய் வராத பெண்களுக்கு நாடாளுமன்றத் தேர்தல் முடிந்தவுடன் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்படும் என திமுக வேட்பாளர் பிரகாஷ் வாக்குறுதியளித்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சிக்கு உட்பட்ட இறைச்சி மஸ்தான் நகர், காமராஜபுரம், பூளவாடி பிரிவு, மாரியம்மன் கோவில், ஐந்து சாலை சந்திப்பு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஈரோடு நாடாளுமன்ற திமுக வேட்பாளர் பிரகாஷ் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.



அப்போது ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தலைமையில் திருப்பூர் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் பத்மநாபன் முன்னிலையில் தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

மேலும் தாராபுரம் திமுக நகர கழக செயலாளர் முருகானந்தம் மற்றும் நகர மன்ற தலைவர் பாப்பு கண்ணன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்நிலையில் இதுகுறித்து வேட்பாளர் பிரகாஷ் பேசுகையில் நான் சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்து மொடக்குறிச்சி அரசு பள்ளியில் கல்வி கற்று இவ்வளவு தூரத்திற்கு வந்துள்ளேன். எதிர்க்கட்சி வேட்பாளரான ஆற்றல் அசோக்குமார் அமெரிக்காவில் படித்துவிட்டு அமெரிக்காவில் வாழ்ந்தவர் கிடையாது என்றும் கூறினார்.

மேலும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதியில் மாதம் ஆயிரம் ரூபாய் வராத பெண்களுக்கு நாடாளுமன்றத் தேர்தல் முடிந்தவுடன் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்படும் என கூறினர். உள்ளாட்சித் துறையில் வழங்கப்படும் அனைத்து திட்டங்களும் செய்து தரப்படும் என வாக்குறுதி அளித்தார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...

ஆழியாறு அணை நீர்மட்டம் 65.4 அடியாக உயர்வு

ஆனைமலை ஆழியாறு அணையின் நீர்மட்டம் மே 26 நிலவரப்படி 65.4 அடியாக உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக வினாட...