அதிமுக வேட்பாளரை போன்று அமெரிக்காவில் படிக்கவில்லை - தாராபுரத்தில் திமுக வேட்பாளர் பிரகாஷ் பிரச்சாரம்

தாராபுரம் சட்டமன்றத் தொகுதியில் மாதம் ஆயிரம் ரூபாய் வராத பெண்களுக்கு நாடாளுமன்றத் தேர்தல் முடிந்தவுடன் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்படும் என திமுக வேட்பாளர் பிரகாஷ் வாக்குறுதியளித்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சிக்கு உட்பட்ட இறைச்சி மஸ்தான் நகர், காமராஜபுரம், பூளவாடி பிரிவு, மாரியம்மன் கோவில், ஐந்து சாலை சந்திப்பு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஈரோடு நாடாளுமன்ற திமுக வேட்பாளர் பிரகாஷ் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.



அப்போது ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தலைமையில் திருப்பூர் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் பத்மநாபன் முன்னிலையில் தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

மேலும் தாராபுரம் திமுக நகர கழக செயலாளர் முருகானந்தம் மற்றும் நகர மன்ற தலைவர் பாப்பு கண்ணன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்நிலையில் இதுகுறித்து வேட்பாளர் பிரகாஷ் பேசுகையில் நான் சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்து மொடக்குறிச்சி அரசு பள்ளியில் கல்வி கற்று இவ்வளவு தூரத்திற்கு வந்துள்ளேன். எதிர்க்கட்சி வேட்பாளரான ஆற்றல் அசோக்குமார் அமெரிக்காவில் படித்துவிட்டு அமெரிக்காவில் வாழ்ந்தவர் கிடையாது என்றும் கூறினார்.

மேலும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதியில் மாதம் ஆயிரம் ரூபாய் வராத பெண்களுக்கு நாடாளுமன்றத் தேர்தல் முடிந்தவுடன் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்படும் என கூறினர். உள்ளாட்சித் துறையில் வழங்கப்படும் அனைத்து திட்டங்களும் செய்து தரப்படும் என வாக்குறுதி அளித்தார்.

Newsletter

கிணத்துக்கடவு: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கோவை கிணத்துக்கடவு தொகுதி பாஜகவிற்கு ஒதுக்காததை எதிர்த்து ஈச்சனாரியில் போராட்டம் நடைபெற்ற போது, தொண்டர் ஒருவர் பெட்ரோல்...

கிணத்துக்கடவு தொகுதி ஒதுக்கீட்டில் அதிருப்தி: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் ஈச்சனாரியில் சாலை மறியல் நடத்திய நிலையில், ஒரு தொண்டர் உடலில் பெட்ரோலை ஊற...

தலைவர்களின் சிலைகளை மூடியிருப்பதை அகற்றாவிட்டால் நாங்கள் அகற்றுவோம் - தந்தை பெரியார் திராவிடர் கழகம்

மாநில தேர்தல் ஆணையர் சிலைகளை மூட வேண்டாம் என்று அறிவித்த பின்னரும், அண்ணா, காமராசர், கலைஞர், MGR சிலைகள் மூடப்பட்டுள்ளன....

LPG தட்டுப்பாடு: கோவை MSME துறைக்கு கடும் சவால்

எல்பிஜி தட்டுப்பாடு, செலவு உயர்வு மற்றும் தொழிலாளர் பிரச்சினைகள் காரணமாக கோவையில் ஃபவுண்ட்ரி மற்றும் பொறியியல் MSME துறை...

MSME நிலுவைத் தொகை தாமதம்: வரிச் சலுகை பாதிப்பு

MSME நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையை தாமதித்தால் வரிச் சலுகை மறுக்கப்படும் என 43B(h) பிரிவு குறித்து பட்டய கணக்கா...

கோவையில் ‘Gift of Life’ சேவைக்கு சி.வி. ராம்குமார் விருது

கோவையில் எஸ்.என்.ஆர் சான்ஸ் அறக்கட்டளை தலைமை செயல் அதிகாரி சி.வி. ராம்குமாருக்கு ரோட்டரி கிளப் சார்பில் ‘மானுட ஐகான்’ வி...