குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகள் கேட்டு கவுண்டச்சிபுதூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பொதுமக்கள் உள்ளிருப்பு போராட்டம்

உடனடியாக தண்ணீர் கிடைக்க தீர்வு காணும் வரை ஊராட்சி மன்ற அலுவலகத்தை விட்டு கலைந்து செல்ல மாட்டோம் என கூறி மாருதி நகர் பகுதி மக்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள மாருதி நகர் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். மாருதி நகர் பகுதியில் குடிநீர், தெரு விளக்கு, மின்சார வசதி மற்றும் சாக்கடை வசதிகள் சரிவர செய்து தராததால் ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து கவுண்டச்சிபுதூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.



மேலும் கோடை காலம் என்பதால் குடிநீர் இரண்டு மற்றும் மூன்று நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே தண்ணீர் வழங்கப்படுகிறது. ஆழ்துளை கிணறுகளில் பழுதாகும் மின்மோட்டார் களை சரி செய்து மீண்டும் இயக்கி வருகின்றனர். எனவே புதிய மின் மோட்டார்களை அமைத்து சீராக தண்ணீர் வழங்க வேண்டும் என ஊராட்சி நிர்வாகத்தில் பலமுறை மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி கவுண்டச்சிபுதூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் மாருதி நகர் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் 50க்கும் மேற்பட்டோர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் உடனடியாக தண்ணீர் கிடைக்க தீர்வு காணும் வரை ஊராட்சி மன்ற அலுவலகத்தை விட்டு கலைந்து செல்ல மாட்டோம் என கூறி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Newsletter

பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் பங்குனி உத்திரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Coimbatore மாவட்டம் பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திரம் திருத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்து...

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...

உடுமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் போட்டியிடுவ...

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை சோதனைக்கு இன்று ஓட்டம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை சந்தேகம் தெரிவித்ததை அடுத்து, ஹிந்து அமைப்பி...