சோனியா காந்தியை இழிவாக பேசிய பாஜக எச்.ராஜாவைக் கண்டித்து கோவையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

செய்தியாளர் சந்திப்பின் போது பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா, சோனியா காந்தியை இழிவாகப் பேசியதைக் கண்டித்து கோவையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா தஞ்சாவூரில் செய்தியாளர் சந்திப்பின் போது தில்லியில் போராடி வரும் விவசாயிகளை பிரதமர் மோடி சந்திக்காதது குறித்தும், விவசாயிகளுக்கான மானியங்கள் குறைத்து வழங்கியது குறித்தும் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த எச்.ராஜா, ஊடங்கங்கள் தேச விரோதமாக செயல்படுவதாக தெரிவித்தார். மேலும், காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியை இழிவுபடுத்தியும் பேசினார். இந்த வீடியோக் காட்சிகள் சமூக வளைதளங்களில் வேகமாக பரவிவருகின்றன. 

பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவின் இத்தகைய இழிவான பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது எச்.ராஜா மன்னிப்பு கேற்கும் வரை தங்களது போராட்டத்தை தொடரப் போவதாக அவர்கள் தெரிவித்தனர். மேலும் பாரதிய ஜனதா கட்சியை எதிர்த்து கோஷங்களை எழுப்பினர்.

தொடர்ந்து, எச்.ராஜாவின் உருவப்படத்தையும் எரிக்க முயன்றனர். அப்போது காவல் துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தனர். இப்போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...

கோவை நீதிமன்றங்களுக்கு மே 31 வரை கோடை விடுமுறை - Madras High Court உத்தரவு

கோடை காலத்தை முன்னிட்டு Madras High Court கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு மே 31 வரை விடுமுறை அறிவித்துள்ளது. விடுமுறை காலத...

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வில் 95.20 சதவீதம் தேர்ச்சி ; ஈரோடு மாவட்டம் முதலிடம்!

மாநிலத்தில் 3,412 தேர்வு மையங்களில் மார்ச் 2 முதல் மார்ச் 26 வரை தேர்வுகள் நடைபெற்றன. இதில் ஈரோடு மாவட்டம் 98.8 சதவீத தே...

பிளஸ் 2 முடிவுகள் வெளியீடு : கோவை கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் களைகட்டியது

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான மகிழ்ச்சியிலும், உயர்கல்வி கனவுகளுடனும் மாணவர்கள் உற்சாகமாக கோவையின் பல்வேறு கல்லூரிகளி...

வெள்ளியங்கிரி மலையில் பக்தர் திடீர் உயிரிழப்பு: வனத்துறை விசாரணை

கோவை வெள்ளியங்கிரி மலையில் தரிசனம் சென்ற மதுக்கரையைச் சேர்ந்த மயில்சாமி என்பவர் பூண்டி நான்காவது மலையில் உயிரிழந்து கிடந...

சத்தி சாலையில் அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து - இளைஞர் பலி

கோவை மாவட்டம் அன்னூர் சத்தி சாலையில் நேற்று மாலை அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரின் ஓட்டுநர...