அவிநாசியில் தெலுங்கில் பேசி பாஜக வேட்பாளர் எல்.முருகன் வாக்கு சேகரிப்பு

கருவலூர் பகுதியில் திறந்த வாகனத்தில் நின்றவாறு மத்திய அரசின் திட்டங்கள் குறித்து தெலுங்கில் பேசி பாஜக வேட்பாளர் எல்.முருகன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.


திருப்பூர்: நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் பாஜக சார்பில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் போட்டியிடுகிறார். இதனைத் தொடர்ந்து நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட அவிநாசி சட்டப்பேரவை தொகுதியை உள்ளடங்கிய கருவலூர், நரியம்பள்ளி புதூர், திருமுருகன்பூண்டி, ராக்கியாபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று தீவிர பரப்புரையில் ஈடுபட்டார்.



முன்னதாக அவிநாசி சட்டத் பேரவை தொகுதிக்குட்பட்ட நரியம்பள்ளி புதூர் பகுதியில் வருகை தந்த அவருக்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். நரியம்பள்ளிபுதூர் அருகே ஆதிதிராவிடர் காலனி பகுதியைச் சேர்ந்த பெண்கள் வேட்பாளரை வரவேற்றபோது தெலுங்கில் பேசி மத்திய அரசின் திட்டங்களை விளக்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.



தொடர்ந்து கருவலூர் பகுதிக்குச் சென்ற எல்.முருகன் திறந்த வாகனத்தில் நின்றவாறு மத்திய அரசின் திட்டங்கள் குறித்து தெலுங்கில் பேசி வாக்குகளை சேகரித்தார். இதில் பாரதப் பிரதமரின் அனைவருக்கும் வீடு, இலவச கேஸ் உள்ளிட்ட திட்டங்கள் அனைவரையும் வந்தடைந்ததா என கேட்டு திட்டங்களின் சிறப்புகள் குறித்தும், மீண்டும் மத்தியில் பாஜக ஆட்சி அமைய வேண்டியதன் அவசியம் குறித்தும் பேசி பரப்புரை மேற்கொண்டார். பிரச்சாரத்தின் போது பாஜக நிர்வாகிகள் மற்றும் பாஜக கூட்டணி கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை மாநகராட்சி ஆணையர் வாகன நிறுத்துமிடம் மற்றும் குடிநீர் பணிகளை ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, ஆர்.எஸ்.புரம் பல்நிலை வாகன நிறுத்துமிடம் மற்றும் மத்திய மண்டல பகுதிகளில்...

மாநில அளவில் முதலிடம் பெற்ற கோவை மாநகராட்சி: அலுவலர்கள், களப்பணியாளர்களுக்கு மேயர் நன்றி..!

மாநில அளவில் சிறந்த மாநகராட்சிக்கான முதல் பரிசைப் கோவை பெற்றதற்காக, மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள், தூய்மைப் பணியாளர...

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு அமைப்பு தொடக்கம்

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு அமைப்பு தொடங்கப்பட்டது. விழாவில் 120-க்கும் மேற்பட்ட மாணவர்கள், பேராசிரிய...

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் பெரும் தீ விபத்து: 100 ஊழியர்கள், 36 வாகனங்களுடன் மாநகராட்சி போராட்டம்

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் 3.1 ஏக்கரில் ஏற்பட்ட தீ விபத்தை கட்டுப்படுத்த மாநகராட்சி ஆணையர் தலைமையில் 100 பணியாளர்கள்,...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் இந்திய அறிவு மரபு அடிப்படையில் வரலட்சுமி பூஜை சிறப்பாக நடைபெற்றது

கற்பகம் அகாடமி ஆஃப் ஹையர் எஜுகேஷன் பல்கலைக்கழகத்தின் இசைத்துறை மற்றும் நடனத்துறை சார்பில் வரலட்சுமி பூஜை இந்திய அறிவு மர...

கோவையில் 1,400 போதை மாத்திரைகள், 300 கிராம் கஞ்சா பறிமுதல் - கணவன், மனைவி கைது

கோவைபுதூர் பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கணவன், மனைவி இருவரை குனியமுத்தூர் போலீசார் கை...