அவிநாசியில் தெலுங்கில் பேசி பாஜக வேட்பாளர் எல்.முருகன் வாக்கு சேகரிப்பு

கருவலூர் பகுதியில் திறந்த வாகனத்தில் நின்றவாறு மத்திய அரசின் திட்டங்கள் குறித்து தெலுங்கில் பேசி பாஜக வேட்பாளர் எல்.முருகன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.


திருப்பூர்: நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் பாஜக சார்பில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் போட்டியிடுகிறார். இதனைத் தொடர்ந்து நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட அவிநாசி சட்டப்பேரவை தொகுதியை உள்ளடங்கிய கருவலூர், நரியம்பள்ளி புதூர், திருமுருகன்பூண்டி, ராக்கியாபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று தீவிர பரப்புரையில் ஈடுபட்டார்.



முன்னதாக அவிநாசி சட்டத் பேரவை தொகுதிக்குட்பட்ட நரியம்பள்ளி புதூர் பகுதியில் வருகை தந்த அவருக்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். நரியம்பள்ளிபுதூர் அருகே ஆதிதிராவிடர் காலனி பகுதியைச் சேர்ந்த பெண்கள் வேட்பாளரை வரவேற்றபோது தெலுங்கில் பேசி மத்திய அரசின் திட்டங்களை விளக்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.



தொடர்ந்து கருவலூர் பகுதிக்குச் சென்ற எல்.முருகன் திறந்த வாகனத்தில் நின்றவாறு மத்திய அரசின் திட்டங்கள் குறித்து தெலுங்கில் பேசி வாக்குகளை சேகரித்தார். இதில் பாரதப் பிரதமரின் அனைவருக்கும் வீடு, இலவச கேஸ் உள்ளிட்ட திட்டங்கள் அனைவரையும் வந்தடைந்ததா என கேட்டு திட்டங்களின் சிறப்புகள் குறித்தும், மீண்டும் மத்தியில் பாஜக ஆட்சி அமைய வேண்டியதன் அவசியம் குறித்தும் பேசி பரப்புரை மேற்கொண்டார். பிரச்சாரத்தின் போது பாஜக நிர்வாகிகள் மற்றும் பாஜக கூட்டணி கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...