அவிநாசியில் தெலுங்கில் பேசி பாஜக வேட்பாளர் எல்.முருகன் வாக்கு சேகரிப்பு

கருவலூர் பகுதியில் திறந்த வாகனத்தில் நின்றவாறு மத்திய அரசின் திட்டங்கள் குறித்து தெலுங்கில் பேசி பாஜக வேட்பாளர் எல்.முருகன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.


திருப்பூர்: நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் பாஜக சார்பில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் போட்டியிடுகிறார். இதனைத் தொடர்ந்து நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட அவிநாசி சட்டப்பேரவை தொகுதியை உள்ளடங்கிய கருவலூர், நரியம்பள்ளி புதூர், திருமுருகன்பூண்டி, ராக்கியாபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று தீவிர பரப்புரையில் ஈடுபட்டார்.



முன்னதாக அவிநாசி சட்டத் பேரவை தொகுதிக்குட்பட்ட நரியம்பள்ளி புதூர் பகுதியில் வருகை தந்த அவருக்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். நரியம்பள்ளிபுதூர் அருகே ஆதிதிராவிடர் காலனி பகுதியைச் சேர்ந்த பெண்கள் வேட்பாளரை வரவேற்றபோது தெலுங்கில் பேசி மத்திய அரசின் திட்டங்களை விளக்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.



தொடர்ந்து கருவலூர் பகுதிக்குச் சென்ற எல்.முருகன் திறந்த வாகனத்தில் நின்றவாறு மத்திய அரசின் திட்டங்கள் குறித்து தெலுங்கில் பேசி வாக்குகளை சேகரித்தார். இதில் பாரதப் பிரதமரின் அனைவருக்கும் வீடு, இலவச கேஸ் உள்ளிட்ட திட்டங்கள் அனைவரையும் வந்தடைந்ததா என கேட்டு திட்டங்களின் சிறப்புகள் குறித்தும், மீண்டும் மத்தியில் பாஜக ஆட்சி அமைய வேண்டியதன் அவசியம் குறித்தும் பேசி பரப்புரை மேற்கொண்டார். பிரச்சாரத்தின் போது பாஜக நிர்வாகிகள் மற்றும் பாஜக கூட்டணி கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...

பேரூர் பட்டீஸ்வரர் கோயில், கோனியம்மன் கோயிலில் வெயிலில் இருந்து பக்தர்களை பாதுகாக்க சிறப்பு ஏற்பாடு

கோவை மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், பேரூர் பட்டீஸ்வரர், கோனியம்மன், மருதமலை முருகன் கோயில்கள் உள்...

மே தினத்தன்று கோவையில் அனைத்து மதுக்கடைகளும் மூடல்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு

மே 1ஆம் தேதி தொழிலாளர் தினத்தை மதுவிலக்கு நாளாக அறிவித்து கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுக்கடைகள், பார்கள், நட்ச...

தொண்டாமுத்தூர் பாக்கு தோட்டத்தில் மாயமான காட்டெருமை: வனத்துறையினர் தீவிர தேடுதல்

கோவை கெம்பனூர் பகுதியில் 6 மாதங்களாக சுற்றித்திரிந்த காட்டெருமை, தொண்டாமுத்தூர்-மாதம்பட்டி சாலையில் உள்ள பாக்கு தோட்டத்த...

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...