பராமரிப்பு பணி காரணமாக கோவை-மேட்டுப்பாளையம் மெமு ரயில் ரத்து

ஏப்ரல் 6ம் தேதி கோவை-மேட்டுப்பாளையம் இடையே மாலை 5.55 மணிக்கு இயக்கப்படும் ரயிலும், மேட்டுப்பாளையம்-கோவை இடையே மாலை 4.45 மணிக்கு இயக்கப்படும் ரயிலும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை தெற்கு இரயில்வே நிர்வாகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை மேட்டுப்பாளையம் இடையே தினமும் 5 முறை மெமு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த வழித்தடத்தில் இருப்புப்பாதை பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், இன்று கோவை-மேட்டுப்பாளையம் இடையே கோவையில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு காலை 11.50 மணிக்கு இயக்கப்படும் ரயிலும், மேட்டுப்பாளையம் - கோவை இடையே காலை 10.55 மணிக்கு இயக்கப்படும் ரயிலும் ரத்து செய்யப்படுகிறது.

அதே போல் வரும் ஏப்ரல் 6ம் தேதி கோவை-மேட்டுப்பாளையம் இடையே மாலை 5.55 மணிக்கு இயக்கப்படும் ரயிலும், மேட்டுப்பாளையம் - கோவை இடையே மாலை 4.45 மணிக்கு இயக்கப்படும் ரயிலும் ரத்து செய்யப்படுகிறது.

மேலும் 8 ,11 ,13ம் தேதிகளில் கோவை - மேட்டுப்பாளையம் இடையே மதியம் 3.45 மணி, மேட்டுப்பாளையம் - கோவை இடையே மதியம் 12.55 மணிக்கு இயக்கப்படும் ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.

அதே போல் வரும் 14 , 16 , 20 , 22 , 24ம் தேதிகளில் கோவை - மேட்டுப்பாளையம் இடையே காலை 11.50 மணி, மேட்டுப்பாளையம் - கோவை இடையே காலை 10.55 மணிக்கு இயக்கப்படும் ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.

Newsletter

பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் பங்குனி உத்திரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Coimbatore மாவட்டம் பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திரம் திருத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்து...

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...

உடுமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் போட்டியிடுவ...

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை சோதனைக்கு இன்று ஓட்டம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை சந்தேகம் தெரிவித்ததை அடுத்து, ஹிந்து அமைப்பி...