காங்கேயத்தில் ஹெல்மெட் அணிந்து வந்தவர்களுக்கு லட்டு வழங்கி போக்குவரத்து காவல்துறை வரவேற்பு

போக்குவரத்து விதிகளை பின்பற்றும் வகையிலும், சாலை விபத்தை தவிர்க்கும் வகையிலும் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்தவர்கள் மற்றும் காரில் சீட் பெல்ட் அணிந்து வந்தவர்கள் ஆகியோருக்கு போக்குவரத்து காவல் ஆய்வாளர் பழனிச்சாமி மற்றும் சமூக ஆர்வலர் சுல்தான்பேட்டை வள்ளி கனகராஜ் ஆகியோர் லட்டுகளை வழங்கினர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் போக்குவரத்து விதிகளை பின்பற்றும் வகையிலும், சாலை விபத்தை தவிர்க்கும் வகையிலும் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்தவர்கள் மற்றும் காரில் சீட் பெல்ட் அணிந்து வந்தவர்கள் ஆகியோருக்கு போக்குவரத்து காவல் ஆய்வாளர் பழனிச்சாமி மற்றும் சமூக ஆர்வலர் சுல்தான்பேட்டை வள்ளி கனகராஜ் ஆகியோர் தலைமையில் லட்டுகளை வழங்கி ஊக்குவித்தனர்.



இதனை தொடர்ந்து போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றாமல் வாகனத்தை ஓட்டி வருபவர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கி விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும், சாலை விபத்துகளை குறைக்க ஒத்துழைக்க வேண்டும் எனவும் காவல் துறை அதிகாரிகள் வாகன ஓட்டிகளுக்கு அறிவுரைகளை வழங்கினர். மேலும் இந்நிகழ்வில் போக்குவரத்து போலிசார்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.



மேலும் நெடுஞ்சாலை மற்றும் சிக்னல்களில் வெயிலில் அயராது பொதுமக்களுக்காக உழைக்கும் சுமார் 10க்கும் மேற்பட்ட போக்குவரத்து காவலர்களுக்கு தாகத்தை குறைக்கும் வகையில் இளநீர் வழங்கப்பட்டு‌ காவலர்களையும் உற்சாகப்படுத்தப்பட்டது. காங்கேயம் ரவுண்டானா, கரூர் சாலை, பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் இது போன்று வாகன ஓட்டிகளுக்கு லட்டுகள் வழங்கப்பட்டது.

Newsletter

கோவையில் ஏ.டி.எம். கொள்ளை முயற்சி - துப்புரவு தொழிலாளியால் கைது

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 3-வது வீதியில் உள்ள கரூர் வைஸ்யா வங்கி ஏ.டி.எம். மையத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்...

கோவை பி.கே.புதூர் சிறுபாலத்தை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண்.92க்கு உட்பட்ட பி.கே.புதூர், பெருமாள்சாமி நகரில் அமைக்கப்பட்டுள்ள சிறுபாலத்தின...

கோவையில் விஸ்வகர்மா ஜெயந்தி விழா, தொழிலாளர்களுக்கு பரிசுகள் வழங்கல்

கோவை கவுண்டம்பாளையம் மைதானத்தில் பி.ஜே.எம்.எம். அமைப்பு சாரா தொழிலாளர் சங்கம் சார்பில் விஸ்வகர்மா ஜெயந்தி மற்றும் தேசிய...

Systemic Corruption Persists Unabated: Coimbatore Unit of Anti-Corruption Movement

The Coimbatore district unit of the Anti-Corruption Movement submitted a representation to Tamil Nadu Chief Minister C J...

கோவை ரயில் நிலையம் அருகே சாக்கடை கால்வாயில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்; போலீசார் விசாரணை

கோவை ரயில் நிலையம் பின்புறம் உள்ள குட்செட் சாலையில் சாக்கடை கால்வாயில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பர...

பெரியார் 148வது பிறந்தநாள்: கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி

பெரியாரின் 148வது பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி நடைபெற்றது. மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி...