காங்கேயத்தில் ஹெல்மெட் அணிந்து வந்தவர்களுக்கு லட்டு வழங்கி போக்குவரத்து காவல்துறை வரவேற்பு

போக்குவரத்து விதிகளை பின்பற்றும் வகையிலும், சாலை விபத்தை தவிர்க்கும் வகையிலும் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்தவர்கள் மற்றும் காரில் சீட் பெல்ட் அணிந்து வந்தவர்கள் ஆகியோருக்கு போக்குவரத்து காவல் ஆய்வாளர் பழனிச்சாமி மற்றும் சமூக ஆர்வலர் சுல்தான்பேட்டை வள்ளி கனகராஜ் ஆகியோர் லட்டுகளை வழங்கினர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் போக்குவரத்து விதிகளை பின்பற்றும் வகையிலும், சாலை விபத்தை தவிர்க்கும் வகையிலும் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்தவர்கள் மற்றும் காரில் சீட் பெல்ட் அணிந்து வந்தவர்கள் ஆகியோருக்கு போக்குவரத்து காவல் ஆய்வாளர் பழனிச்சாமி மற்றும் சமூக ஆர்வலர் சுல்தான்பேட்டை வள்ளி கனகராஜ் ஆகியோர் தலைமையில் லட்டுகளை வழங்கி ஊக்குவித்தனர்.



இதனை தொடர்ந்து போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றாமல் வாகனத்தை ஓட்டி வருபவர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கி விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும், சாலை விபத்துகளை குறைக்க ஒத்துழைக்க வேண்டும் எனவும் காவல் துறை அதிகாரிகள் வாகன ஓட்டிகளுக்கு அறிவுரைகளை வழங்கினர். மேலும் இந்நிகழ்வில் போக்குவரத்து போலிசார்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.



மேலும் நெடுஞ்சாலை மற்றும் சிக்னல்களில் வெயிலில் அயராது பொதுமக்களுக்காக உழைக்கும் சுமார் 10க்கும் மேற்பட்ட போக்குவரத்து காவலர்களுக்கு தாகத்தை குறைக்கும் வகையில் இளநீர் வழங்கப்பட்டு‌ காவலர்களையும் உற்சாகப்படுத்தப்பட்டது. காங்கேயம் ரவுண்டானா, கரூர் சாலை, பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் இது போன்று வாகன ஓட்டிகளுக்கு லட்டுகள் வழங்கப்பட்டது.

Newsletter

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...

முதல்வர் விஜய் - எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் சந்திப்பு

அதிமுக முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகத்தை முதல்வர் விஜய் நேரில் சந்தித்தது தமிழக அரசியல் வட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தினம் 2026 சிறப்பாக கொண்டாடப்பட்டது

கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் மே 12, 2026 அன்று சர்வதேச செவிலியர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது...

சென்னை - கோவை இடையே கோடை சிறப்பு ரயில்கள் இயக்கம்

கோடை விடுமுறையில் அதிகரித்த பயணிகள் தேவையை கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே மே 2026ல் சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக செ...

பிரதமர் மோடியின் தங்க வாங்காதீர்கள் அறிவுறுத்தல்: 5 கோடி பேரின் வாழ்வாதாரம் ஆபத்தில் - நகை தயாரிப்பாளர்கள் எச்சரிக்கை

பிரதமர் Narendra Modi தங்கம் வாங்குவதை ஒரு ஆண்டு தவிர்க்குமாறு அறிவுறுத்தியதால் நாடு முழுவதும் தங்க நகைத் தொழிலில் ஈடுபட...