துடியலூர் அருகே அண்ணாமலை பிரச்சாரம் – கிரேன் மூலம் மாலை அணிவித்து இந்து முன்ணணி அமைப்பினர் வரவேற்பு

கடந்த பத்து ஆண்டுகளில் நமக்காக 24 மணி நேரமும் உழைத்து நல்ல பல திட்டங்களை தந்துள்ள மோடிக்கு ஊதியமாக 2024 பாராளுமன்ற தேர்தல் 400 எம்பிக்களை பரிசாக வழங்க உள்ளோம் என்று பாஜக வேட்பாளர் அண்ணாமலை பேசினார்.


கோவை: கோவை நாடாளுமன்ற பாஜக வேட்பாளராக போட்டியிடும் அண்ணாமலை கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ராக்கிபாளையம் பிரிவு பகுதியில் பிரச்சாரம் செய்தார்.

அங்கு பிரச்சாரம் செய்ய வந்த அண்ணாமலைக்கு அப்பகுதியைச் சேர்ந்த இந்து முன்னணி அமைப்பினர் சுமார் 12 அடி உயரம் உள்ள மிகப்பெரிய பிரமாண்டமான மாலையை கிரேன் மூலம் அணிவித்து சிறப்பான வரவேற்பு வழங்கினர்.



அங்கு அண்ணாமலை பேசும்போது இப்பொழுது இல்லை என்றால் எப்பொழுதும் இல்லை என்பதில் தெளிவாக இருக்கிறோம். கடந்த பத்து ஆண்டுகளில் நமக்காக 24 மணி நேரமும் உழைத்து நல்ல பல திட்டங்களை தந்துள்ள மோடிக்கு ஊதியமாக 2024 பாராளுமன்ற தேர்தல் 400 எம்பிக்களை பரிசாக வழங்க உள்ளோம்.

கடந்த 10 ஆண்டுகளில் நாம் ஆட்சியில் இருந்த போதும் தமிழகத்தில் கிடைத்த எம்பிகளால் எந்த பயனும் ஏற்படவில்லை அனைத்து வசதிகள் இருந்தும் கோவை கடந்த 10 ஆண்டுகளில் எம்பிகளால் எந்த முன்னேற்றம் இல்லாமல் உள்ளது.



தமிழகத்தில் ஒரு முக்கிய நகரமாக இந்திய வரைபடத்தில் ஒரு முக்கிய நகரமாகவும் உலக வரைபடத்தில் ஒரு முக்கிய நகரமாகவும் கோவையை மாற்ற பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும். மத்தியில் மோடி ஆட்சியில் இருக்கும் போது இங்கு உங்கள் வீட்டுப் பிள்ளை இந்த அண்ணாமலை இங்கு இருக்க வேண்டும்.

ஏப்ரல் 19ஆம் தேதி நீங்கள் செய்ய வேண்டிய முதல் வேலை வாக்கு இயந்திரத்தில் முதல் பட்டனாக உள்ள தாமரைக்கு வாக்களிக்க வேண்டும். அதன் பிறகு நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். மோடியின் 10 ஆண்டுகால ஆட்சியின் சாதனைகளை பார்த்து அரசியலுக்கு கொஞ்சம் கூட சம்பந்தம் இல்லாதவர்கள் கூட தற்போது பாஜக பக்கம் வந்துள்ளனர்.



அடுத்த 15 நாட்கள் தான் கடுமையான வேலை. நீங்கள் ஒவ்வொரு வீடாக சென்று பாஜகவிற்கு வாக்குகளை சேகரிக்க வேண்டும். அதன் பிறகு ஐந்து ஆண்டுகள் உங்களுக்காக நாங்கள் பாடுபடுவது எங்கள் பொறுப்பு என்றார்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...