துடியலூர் அருகே அண்ணாமலை பிரச்சாரம் – கிரேன் மூலம் மாலை அணிவித்து இந்து முன்ணணி அமைப்பினர் வரவேற்பு

கடந்த பத்து ஆண்டுகளில் நமக்காக 24 மணி நேரமும் உழைத்து நல்ல பல திட்டங்களை தந்துள்ள மோடிக்கு ஊதியமாக 2024 பாராளுமன்ற தேர்தல் 400 எம்பிக்களை பரிசாக வழங்க உள்ளோம் என்று பாஜக வேட்பாளர் அண்ணாமலை பேசினார்.


கோவை: கோவை நாடாளுமன்ற பாஜக வேட்பாளராக போட்டியிடும் அண்ணாமலை கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ராக்கிபாளையம் பிரிவு பகுதியில் பிரச்சாரம் செய்தார்.

அங்கு பிரச்சாரம் செய்ய வந்த அண்ணாமலைக்கு அப்பகுதியைச் சேர்ந்த இந்து முன்னணி அமைப்பினர் சுமார் 12 அடி உயரம் உள்ள மிகப்பெரிய பிரமாண்டமான மாலையை கிரேன் மூலம் அணிவித்து சிறப்பான வரவேற்பு வழங்கினர்.



அங்கு அண்ணாமலை பேசும்போது இப்பொழுது இல்லை என்றால் எப்பொழுதும் இல்லை என்பதில் தெளிவாக இருக்கிறோம். கடந்த பத்து ஆண்டுகளில் நமக்காக 24 மணி நேரமும் உழைத்து நல்ல பல திட்டங்களை தந்துள்ள மோடிக்கு ஊதியமாக 2024 பாராளுமன்ற தேர்தல் 400 எம்பிக்களை பரிசாக வழங்க உள்ளோம்.

கடந்த 10 ஆண்டுகளில் நாம் ஆட்சியில் இருந்த போதும் தமிழகத்தில் கிடைத்த எம்பிகளால் எந்த பயனும் ஏற்படவில்லை அனைத்து வசதிகள் இருந்தும் கோவை கடந்த 10 ஆண்டுகளில் எம்பிகளால் எந்த முன்னேற்றம் இல்லாமல் உள்ளது.



தமிழகத்தில் ஒரு முக்கிய நகரமாக இந்திய வரைபடத்தில் ஒரு முக்கிய நகரமாகவும் உலக வரைபடத்தில் ஒரு முக்கிய நகரமாகவும் கோவையை மாற்ற பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும். மத்தியில் மோடி ஆட்சியில் இருக்கும் போது இங்கு உங்கள் வீட்டுப் பிள்ளை இந்த அண்ணாமலை இங்கு இருக்க வேண்டும்.

ஏப்ரல் 19ஆம் தேதி நீங்கள் செய்ய வேண்டிய முதல் வேலை வாக்கு இயந்திரத்தில் முதல் பட்டனாக உள்ள தாமரைக்கு வாக்களிக்க வேண்டும். அதன் பிறகு நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். மோடியின் 10 ஆண்டுகால ஆட்சியின் சாதனைகளை பார்த்து அரசியலுக்கு கொஞ்சம் கூட சம்பந்தம் இல்லாதவர்கள் கூட தற்போது பாஜக பக்கம் வந்துள்ளனர்.



அடுத்த 15 நாட்கள் தான் கடுமையான வேலை. நீங்கள் ஒவ்வொரு வீடாக சென்று பாஜகவிற்கு வாக்குகளை சேகரிக்க வேண்டும். அதன் பிறகு ஐந்து ஆண்டுகள் உங்களுக்காக நாங்கள் பாடுபடுவது எங்கள் பொறுப்பு என்றார்.

Newsletter

சட்டப்பேரவையில் வார்த்தை ஜாலங்களுக்கு இடமளிக்காமல் ஆக்கப்பூர்வமாக விவாதிக்க வேண்டும்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், பேரவைத் தலைவர் மற்றும் தமிழக முதல்வர் தெரிவித்ததை...

கோவை மாவட்ட வாள்வீச்சு போட்டி: சித்தாப்புதூர் பெண்கள் பள்ளி மாணவிகள் வெண்கலம் வென்று பெருமை

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வாள்வீச்சுப் போட்டியில் சித்தாப்புதூர் மாநகராட்சி பெண்கள் உயர்ந...

கோவை கங்கா நர்சிங் கல்லூரியில் நரம்பியல் அவசர சிகிச்சை குறித்த தேசிய மாநாடு சிறப்பாக நடைபெற்றது

கோவை கங்கா நர்சிங் கல்லூரி சார்பில் "நியூரோ ஃபிராண்டியர்ஸ் 2026" என்ற தலைப்பில் நரம்பியல் சார்ந்த அவசர சிகிச்சை குறித்த...

கோவையில் துணிக் கழிவுகளை மறுசுழற்சி செய்ய மாநகராட்சியின் “மறு நெசவு” திட்டம் தொடக்கம்

கவுண்டம்பாளையம் வார்டு 33-ல் பரீட்சார்த்த முறையில் தொடங்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் கீழ், வீடுகளில் தேவையின்றி சேரும் துண...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் K.ரங்கநாயகி ராமச்சந்திரன் நேரில் ஆய்வ...

கோவையில் தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் போக்சோவில் கைது

கோவை கருமத்தம்பட்டி சாலையில் உள்ள தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் சேவியர் என்பவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தத...