வால்பாறையில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் வசந்தராஜன் அறிமுக கூட்டம்

வால்பாறையை சுற்றுலா தளமாக அறிவிக்கப்படும், தேயிலைத் தோட்டம் தொழிலாளர்களுக்கு சொந்தமாக வீடு கட்டி தரப்படும், தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்படும் என்று கூறி பாஜகவினர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.


கோவை: வருகிற பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் பாஜக கட்சியில் தனித்துவமாக நின்று தங்களது பாராளுமன்ற வேட்பாளர்களை அறிமுகம் செய்து வருகிறார்கள். இந்நிலையில் கோவை மாவட்டம் பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியில் வசந்த ராஜன் என்ற வேட்பாளரை நிறுத்தி உள்ளனர்.



வால்பாறை பகுதியில் 31.3.24 பாரதிய ஜனதா கட்சி சார்பாக வசந்தராஜன் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் வால்பாறை நகர செயலாளர் ஆர்.கே. பாலாஜி மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். வால்பாறை பழைய பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த கட்சி கூடத்தில் வேட்பாளர் அறிமுகம் கூட்டம் மற்றும் வாக்கு சேகரிப்பு நடைபெற்றது.

பொள்ளாச்சி பகுதியில் உள்ள வால்பாறையை சுற்றுலா தளமாக அறிவிக்கப்படும், தேயிலைத் தோட்டம் தொழிலாளர்களுக்கு சொந்தமாக வீடு கட்டி தரப்படும், தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்படும், பல்வேறு திட்டங்கள் பிரதமர் மோடி தலைமையில் செயல்படுத்தப்படும் என்று கூறி பாரதிய ஜனதா கட்சி தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.

Newsletter

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் K.ரங்கநாயகி ராமச்சந்திரன் நேரில் ஆய்வ...

கோவையில் தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் போக்சோவில் கைது

கோவை கருமத்தம்பட்டி சாலையில் உள்ள தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் சேவியர் என்பவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தத...

பருவமழை எதிரொலி: கோவை வடக்கு மண்டல வடிகால் தூர்வாரும் பணிகளை ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja வடக்கு மண்டல பகுதிகளில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் வடி...

அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையில் தொடர் நீர்வரவால் நீர்மட்டம் 57.12 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 202 கன அட...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது....

கோவை தீத்திபாளையத்தில் வீட்டில் 1.10 டன் குட்கா பதுக்கல்; இருவர் மீது வழக்கு; ஒருவர் தலைமறைவு

கோவை பேரூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தீத்திபாளையம் பாலாஜி நகரில் வீட்டின் முதல் மாடியில் சுமார் 1.10 டன் குட்கா பொருட...