உரிய இழப்பீடு கேட்டு நல்லதங்காள் பாசன விவசாயிகள் தாராபுரம் அருகே கைகளில் கருப்பு கொடி ஏந்தி போராட்டம்

நல்லதங்காள் அணைக்கு நிலம் கொடுத்த விவசாயிகள் இன்று முதல் தேர்தல் புறக்கணிப்பு செய்து தங்கள் வீடுகளில் கருப்பு கொடி கட்டி எதிர்ப்பை தெரிவிக்கப் போவதாக அறிவித்துள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள பொன்னிவாடி கிராமத்தில் உள்ள நல்லதங்காள் அணை உள்ளது. இந்த அணைக்கு கடந்த 20-ஆண்டுகளுக்கு முன்பு நல்லதங்காள் அணை கட்டுவதற்கு அப்பகுதியைச் சேர்ந்த 750-க்கும் விவசாயிகளிடமிருந்து நிலம் கையகப்படுத்தப்பட்டது. நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு தொகை தற்போது வரை வழங்கப்படாததால் விவசாயிகள் கையில் கருப்பு கொடி ஏந்தி வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் புறக்கணிக்கப் போவதாக பதாகைகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



நல்லதங்காள் அணைக்கு நிலம் கொடுத்த விவசாயிகள் இன்று முதல் தேர்தல் புறக்கணிப்பு செய்து தங்கள் வீடுகளில் கருப்பு கொடி கட்டி எதிர்ப்பை தெரிவிக்கப் போவதாக அறிவித்துள்ளனர். நல்லதங்காள் நீர்த்தேக்கணைக்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்க கோரி விவசாயிகள் கடந்த 6-மாதங்களாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். பின்னர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இன்று கைகளில் கருப்பு கொடி ஏந்தியும் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிக்க போவதாகவும் கையில் பதாகைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...