திமுக, அதிமுக கட்சிகள் மக்களை கையேந்தும் நிலைக்கு தள்ளி உள்ளது - உடுமலையில் பாஜக வேட்பாளர் வசந்தராஜன் பேச்சு

பொன்னேரி, குடிமங்கலம், பூளவாடி உட்பட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் வசந்தராஜன் தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்ற தொகுதி குடிமங்கலம் வடக்கு ஒன்றியம் பகுதிகளான பொன்னேரி, குடிமங்கலம், பூளவாடி உட்பட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் இன்று பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் வசந்த ராஜன் தாமரை சின்னத்தில் பொதுமக்களிடையே வாக்குகள் சேகரித்தார்.



அப்போது அவர் பேசியதாவது, கடந்த சில வருடங்களாகவே திராவிட கட்சிகள் அனைத்து திமுக அதிமுக பொதுமக்களை கையேந்தும் நிலைக்கு தள்ளி உள்ளது. இதனால் ஏழை எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். தற்போது பிரதமர் வேட்பாளர் யார் என்று தெரியாமல் திமுக, அதிமுகவினர் வாக்குகள் சேகரித்து வருகின்றனர். ஏழை எளிய மக்களுக்கும், விவசாயிகளுக்கும் பாரத பிரதமர் மோடி எண்ணற்ற பல திட்டங்களை வழங்கியுள்ளார்.



மேலும் தற்போது உள்ள திட்டங்கள் தொடரவும் பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியை முன்மாதிரி தொகுதியாக மாற்ற தாமரை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என பேசினார். வாக்கு சேகரிப்பின் போது, திருப்பூர் தெற்கு மாவட்ட பாஜக தலைவர் மங்களம் ரவி, பொதுச்செயலாளர் வடுகநாதன், குடிமங்கலம் வடக்கு ஒன்றிய தலைவர் குணசேகரன், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் குடிமங்கலம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சிவானந்தம், இளைஞர் அணி மாவட்ட செயலாளர் சுப்பிரமணியம், சனுப்பெட்டி ஊராட்சி செயலாளர் ராமலிங்கம் ஒன்றிய துணைச் செயலாளர் நாராயணசாமி மற்றும் பாமக, பாஜக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...