பொது மக்களிடையே வாக்களிப்பதின் அவசியம் குறித்து பொள்ளாச்சியில் வானில் ராட்சத பலூன் பறக்கவிட்டு விழிப்புணர்வு

பொள்ளாச்சி பேருந்து நிலையம், நகராட்சி அலுவலகம், மாவட்ட மருத்துவமனை ஆகிய பகுதிகளில் என் வாக்கு என் உரிமை, 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்ற வாசகங்களுடன் கூடிய ராட்சத பலூன் வானில் பறக்க விடப்பட்டது.


கோவை: தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி வாக்காளர்கள் 100% வாக்களிக்க வலியுறுத்தி பொதுமக்களிடையே தேர்தல் அதிகாரிகள் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக பொள்ளாச்சியில் இன்று பொள்ளாச்சி பேருந்து நிலையம், நகராட்சி அலுவலகம், மாவட்ட மருத்துவமனை ஆகிய பகுதிகளில் என் வாக்கு என் உரிமை, 100% வாக்களிக்க வேண்டும் என்ற வாசகங்களுடன் கூடிய ராட்சத பலூன் வானில் பறக்க விடப்பட்டது.



பொள்ளாச்சி சார் ஆட்சியரும், உதவி தேர்தல் நடத்தும் அலுவலருமான கேத்தரின் சரண்யா இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். கடந்த முறை நடந்த முடிந்த தேர்தல்களில் குறைவான வாக்கு பதிவான இடங்களில் வாக்கு சதவீதத்தை உயர்த்த மக்களிடையே வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதாக உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கேத்தரின் சரண்யா தெரிவித்தார்.

Newsletter

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...