உடுமலையில் முன்னாள் அமைச்சர் உடுமலை கே. ராதாகிருஷ்ணன் தெலுங்கில் பேசி அதிமுக வேட்பாளருக்கு வாக்கு சேகரிப்பு

திமுக அரசு அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை முடக்கி வருகிறது. தாலிக்கு தங்கம், ஸ்கூட்டர், இலவச ஆடு உள்ளிட்ட திட்டங்களை முடக்கி வருவதாக முன்னாள் அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.


கோவை: பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அஇஅதிமுக வேட்பாளர் கார்த்திகேயன் உடுமலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட உடுமலை நகராட்சி பகுதியில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். உடுமலைக்கு வருகை தந்த அவருக்கு முன்னாள் அமைச்சரும், திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்ட செயலாளரும் உடுமலை சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ வுமான உடுமலை ராதாகிருஷ்ணன் தலைமையில் அதிமுகவினர் தாரை தப்பட்டை முழுங்க பட்டாசு வெடித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அதைத் தொடர்ந்து எரிப்பாளையம், யு.எஸ். எஸ் காலனி, அண்ணா நகர், காந்தி நகர், உடுமலை மத்திய பஸ் நிலையம், தலை கொண்ட அம்மன் கோவில், லயன்ஸ் கிளப், ராமசாமி நகர், பழனியாண்டவர் நகர், காந்தி சதுக்கம், நக்கீரர் வீதி, யூனியன் ஆபீஸ் உள்ளிட்ட பகுதியில் திறந்தவெளி பிரச்சாரம் மேற்கொண்டார்.



அப்போது உடுமலை ராதாகிருஷ்ணன் உடுமலை நகராட்சி நான்காவது வார்டு இ எஸ் எஸ் காலனியில் அதிமுக செய்த சாதனைகளை தெலுங்கில் பேசி வேட்பாளர் கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார். மேலும் அவர் கூறியதாவது, அதிமுக ஆட்சியில் உடுமலை சட்டமன்றத் தொகுதியில் ரூ 400 கோடியில் கால்நடை மருத்துவமனை கட்டப்பட்டது. தங்கம்மாள்ஓடையை தூர்வாரி அதன் இரண்டு புறங்களிலும் தடுப்புச் சுவர் கட்டப்பட்டது. போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் புதிய பஸ் நிலையம் கட்டுவதற்காக நிதி ஒதுக்கப்பட்டது.



நகரப் பகுதி இரவிலும் ஒளிரும் வகையில் தெருவிளக்குகள் அமைக்கப்பட்டது. உடுமலை வாரச்சந்தையை விரிவு படுத்துவதற்காக நிதி ஒதுக்கப்பட்டது. இது போன்ற ஏராளமான திட்டங்கள் அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. ஆனால் திமுக அரசு அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை முடக்கி வருகிறது. அதில் தாலிக்கு தங்கம், ஸ்கூட்டர், இலவச ஆடு, மடிக்கணினி உள்ளிட்டவை அடங்கும். எனவே பொதுமக்கள் சிந்தித்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து நமது வேட்பாளரை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என பேசினார்.

Newsletter

ஆரோ பல்கலைக்கழகம் வழங்கிய "Institutional Excellence" விருது ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரிக்கு

குஜராத் சூரத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான ஹேக்கத்தான் நிகழ்வில், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரிக்கு ஆரோ பல்கலைக்கழ...

கோவை தேர்வீதி சாலையில் கிடந்த ரூ.9,500 பணம் அடங்கிய பர்ஸை உரியவரிடம் ஒப்படைத்த 9 வயது மாணவிக்கு பாராட்டு

கோவை தாமஸ் வீதியை சேர்ந்த 9 வயது மாணவி ஜான்வி தேர்வீதி அருகே கிடந்த ரூ.9,500, ஏடிஎம் கார்டு, ஆதார் கார்டு அடங்கிய மணி பர...

சூலூரில் விவசாயத் தோட்டங்களில் 6-வது நாள் தீவிர வாக்குச் சேகரிப்பு: தளபதி முருகேசன் களப்பணி

கோவை தெற்கு மாவட்ட திமுக சார்பில் சூலூர் தொகுதி பாப்பம்பட்டி ஊராட்சியில் விவசாயத் தோட்டங்களில் 6-வது நாள் தேர்தல் பிரச்ச...

பெரியநாயக்கன்பாளையம் பயனீர் கலை அறிவியல் கல்லூரி ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது

பெரியநாயக்கன்பாளையம் ஜோதிபுரத்தில் உள்ள பயனீர் கலை அறிவியல் கல்லூரியின் ஆண்டு விழா நடைபெற்றது. கல்வியில் சிறப்பிடம் பெற்...

பொள்ளாச்சியில் அதிமுக தேர்தல் பரப்புரை: Jayaraman வாக்குச் சேகரிப்பு

பொள்ளாச்சி அண்ணா நகர் மற்றும் விஜயபுரம் பகுதிகளில் முன்னாள் அமைச்சர் Jayaraman தலைமையில் அதிமுக கட்சியினர் தீவிர வாக்குச...

கோவை மருதமலை முருகன் கோவிலில் NDA வெற்றிக்காக சிறப்பு பூஜை

கோவை மருதமலை முருகன் கோவிலில் வரவிருக்கும் தேர்தலில் National Democratic Alliance அமோக வெற்றி பெற வேண்டி சிறப்பு பூஜை நட...