வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து குப்பிச்சிபாளையத்தில் விழிப்புணர்வு முகாம்

வரும் நாடாளுமன்ற தேர்தலில் 100 சதவீதம் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று தேசிய மனித மேம்பாட்டு மையம் மற்றும் ரோட்டரி சமுதாயக் குழு இணைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.


கோவை: கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள தேசிய மனித மேம்பாட்டு மையம் மற்றும் ரோட்டரி சமுதாயக் குழு இணைந்து மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் வகையில் தொடர்ந்து விழிப்புணர்வு முகாமினை நடத்தி வருகின்றன.

இந்த நிலையில் வரும் நாடாளுமன்ற தேர்தல் (ஏப்ரல்.19), நடைபெற உள்ளது. இதில் 100% அனைவரும் வாக்களிக்கும் வகையிலும், நாட்டை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்ல பாராளுமன்ற உறுப்பினரை தேர்ந்தெடுக்கும் வகையிலும், ஒவ்வொரு கிராமமாக சென்று விழிப்புணர்வு முகாமினை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.



அதன் முதல் கட்டமாக கோவை, பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள குப்பிச்சிபாளையம் ரோட்டில் இன்று (மார்ச்.29) வாக்களிப்பதின் அவசியம் குறித்த விழிப்புணர்வு முகாம் நடத்தினர்.

இந்த முகாமில் வாக்களிப்பதின் அவசியம் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பேனர்களை வைத்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Newsletter

கோவை மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் உள்விளையாட்டு அரங்கங்கள் அமைக்கும் பணிகளை ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் கைப்பந்து, இறகுபந்து, கபடி, Wushu உள்ளிட்ட விளையாட்டுகளுக்கான உள்விளையாட...

முதல்வரின் தனிப்பட்ட ஜோதிடரின் OSD நியமனம் ரத்து: தமிழக அரசு உத்தரவு

முதல்வரின் தனிப்பட்ட ஜோதிடரான ரிக்கே ராதன் பண்டிட் வெற்றிவேலின் அரசியல் OSD நியமனத்தை, கடும் எதிர்ப்புகள் மற்றும் விமர்ச...

பொதுமக்களை விரட்டிய காங்கேயம் காளை; மரத்தில் ஏறி உயிர்தப்பிய வாலிபர்கள்.

கோவை உக்கடம் வாளாங்குளம் பகுதியில் நேற்று இரவு சுற்றித் திரிந்த காங்கேயம் காளை ஒன்று திடீரென பொதுமக்களை விரட்டியதில், பய...

கோவை வடக்கு-பீளமேடு இடையே தண்டவாளத்தில் அலுமினிய ஏணி வைத்த இருவர் கைது

கோவை வடக்கு மற்றும் பீளமேடு ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் அலுமினிய ஏணியை வைத்த வழக்கில் ரயில்வே பாதுகாப்புப்...

வீட்டில் கஞ்சா செடி வளர்த்த நபருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காரப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன் (52) தனது வீட்டில் கஞ்சா செடி வளர்த்ததோடு, 4 கிலோ கஞ்சா வ...

பொள்ளாச்சி ஆழியாறு பகுதியில் மது போதையில் தள்ளி இளைஞர் கொலை - குற்றவாளி கைது

பொள்ளாச்சி வட்டம் ஆழியாறு நெல்லித்துறை பகுதியில் குடும்ப பூசல் காரணமாக மது போதையில் வந்த ஆனந்த் என்பவர் பாலகிருஷ்ணனை தள்...