உடுமலையில் பாஜக வேட்பாளர் வசந்த ராஜன் அறிமுக கூட்டம் - முன்னாள் அமைச்சர் சண்முகவேலு பங்கேற்பு

பாரதிய ஜனதா கட்சிக்கு வாக்களித்தால் விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான ஆனைமலை நல்லாறு திட்டம் நிறைவேற்றப்படும் என பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் வசந்த ராஜன் தெரிவித்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தலைமை அலுவலகத்தில் பாஜக வேட்பாளர் வசந்த ராஜன் அறிமுக கூட்டம் முன்னாள் அமைச்சரும், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் துணை பொதுச்செயலாளருமான சண்முகவேலு தலைமயில் நடைபெற்றது.



கூட்டத்தில் பொள்ளாச்சி பாராளுமன்றத் தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், பாரதிய ஜனதா கட்சி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் அனைவரும் ஒருங்கிணைந்து வீடு வீடாக மத்திய அரசின் திட்டங்களை கூறி வாக்கு சேகரிக்க வேண்டும், வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் மக்கள் மாற்றத்தை விரும்ப எதிர்பார்க்கின்றனர், மூன்றாவது முறையாக பாரத பிரதமர் மோடி பிரதமர் ஆவது உறுதி என முன்னாள் அமைச்சரும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் துணை பொதுச் செயலாளருமான சண்முகவேலு பேசினார்.



பின்னர் பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் வசந்த ராஜன் பேசும்போது, தமிழகத்தில் திராவிட கட்சிகளை வெளியேற்ற தற்பொழுது நல்ல வாய்ப்பு அமைந்துள்ளது. மக்கள் திராவிட கட்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் காலம் வந்துவிட்டது. திமுக, அதிமுக கட்சியினர் எம்பி ஆனால் பாராளுமன்றத்திற்கு டீ குடிப்பதற்கு மட்டும் தான் செல்வார்கள்.

எந்த ஒரு திட்டங்களையும் செயல்படுத்த மாட்டார்கள். எனவே பாரதிய ஜனதா கட்சிக்கு வாக்களித்தால் பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியை மாதிரியான திட்டமாக கொண்டு வர அரும் பாடுபடுவேன் மற்றும் இந்தப் பகுதி விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான ஆனைமலை நல்லாறு திட்டம் நிறை வேற்றுதல் உட்பட பல்வேறு முக்கிய திட்டங்கள் நிறைவேற்றப்படும் என பேசினார்.

திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் மங்களம் ரவி, மாவட்ட பொதுச் செயலாளர் வடுகநாதன், உடுமலை நகர பாஜக தலைவர் கண்ணாயிரம், மடத்துக்குளம் ஒன்றிய செயலாளர் ராஜ்குமார், உடுமலை நகர அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் நகர செயலாளர் பாஸ்கரன், மற்றும் உடுமலை மடத்துக்குளம் சட்டமன்றத் தொகுதி பாஜக நிர்வாகிகள் கலர் கலந்து கொண்டனர்.

Newsletter

Coimbatore Court Convicts Two Govt School Teachers in Forged Salary Certificate Loan Case

The CBI Special Court in Coimbatore has sentenced Krishnagiri government school teachers T. Vinothkumar and Nithilan to...

போலி சான்றிதழ் காட்டி ரூ.25.5 லட்சம் மோசடி: இரு ஆசிரியர்களுக்கு 3½ ஆண்டு சிறை

கிருஷ்ணகிரி மாவட்டம் பாப்பனூர் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டி.வினோத்குமார் மற்றும் நிதிலன் ஆகியோர் போலி சம்பளச் சான்றிதழ் க...

கோவை முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இன்று மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச்...

கோவை வீரகேரளத்தில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து: ₹2 கோடி பொருட்கள் எரிந்து சாம்பல்

கோவை வடவள்ளி அருகே வீரகேரளம் சின்மயா நகர் பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா பிளாஸ்டிக் குடோனில் மின் கசிவு காரணமாக தீ விபத்து...

கோவையில் நாளை (19.09.2026) காந்திபுரம் உள்பட பல பகுதிகளில் மின்தடை

கோவை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 19, 2026 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மண...

கோவையில் ஏ.டி.எம். கொள்ளை முயற்சி - துப்புரவு தொழிலாளியால் கைது

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 3-வது வீதியில் உள்ள கரூர் வைஸ்யா வங்கி ஏ.டி.எம். மையத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்...