கோவையில் உள்ள முன்னணி இன்குபேட்டர் ஏஐசி ரைஸ் மற்றும் டைசில் உயிரித் தொழில்நுட்ப பூங்கா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் ஏஐசி ரைஸின் உயிரிசார் தொழில் நுட்பத்தை சார்ந்து செயல்படும் தொழில் முனைவோர்கள் ஆய்வுகளை மேற்கொள்ள ஆய்வுக் கூடங்கள் பயன்படுத்திக் கொள்ள வழிவகைச் செய்யப்பட்டுள்ளது.


கோவை: கோவை ஈச்சனாரியில் அமைந்துள்ள அடல் இன்குபேஷன் சென்டர் ரைஸானது உயிரித் தொழில்நுட்பம் சார்ந்த தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாட்டின் தொழிற்பேட்டை முன்னேற்றக் கழகத்தின் கீழ் செயல்படுகின்ற டைசில் உயிரித் தொழில்நுட்ப பூங்கா உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டது.

இதன் வாயிலாக ஏஐசி ரைஸ் மற்றும் டைசில் உயிரி உயிரிசார் தொழில் நுட்பத்தை சார் தொழில் முனைவோர்களின் வளர்ச்சியை ஊக்குவிப்பதோடு, வணிக வெற்றியை நோக்கி அவற்றைத் தூண்டுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன. ஏஐசி ரைஸின் உயிரிசார் தொழில் நுட்பத்தை சார்ந்து செயல்படும் தொழில் முனைவோர்கள் ஆய்வுகளை மேற்கொள்ள ஆய்வுக் கூடங்கள் பயன்படுத்திக் கொள்ளவும் வழிவகைச் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஏஐசி ரைஸின் சார்ந்து செயல்படும் தொழில் முனைவோர்கள் பயனடைவார்கள்.

இந்நிகழ்வில் ஏஐசி ரைஸின் சார்பில் இன்குபேஷன் மற்றும் நிர்வாக துணைத் தலைவர் பிரதீப் ராஜ் மற்றும் முதலீடுகள் மற்றும் வணிக மேலாண்மையின் துணைத் தலைவர் அருண்ராஜ் மாணிக்கராஜ் ஆகியோர் பங்கு பெற்றனர். மேலும், டைசில் உயிரி பூங்கா சார்பில் மேலாண்மை இயக்குநர் பூங்குமரன், நிர்வாக செயலர் காயத்ரி மற்றும் தலைமை மின் பொறியாளர் பழனியப்பன் ஆகியோர் பங்கு பெற்றனர்.

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...