வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர் - கோவையில் நாம் தமிழர் கட்சியின் மாற்று வேட்பாளர்கள் குற்றச்சாட்டு

வேட்பு மனு தாக்கல் செய்ய தேவையான ஆவணங்களை கொண்டு சென்ற தங்களை தடுத்து நிறுத்தியதாக நாம் தமிழர் கட்சியினர், கோவை ஆட்சியர் அலுவலகத்தில் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


கோவை: கோவை மற்றும் பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டியிட, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் நேற்று முன்தினம் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். 



இந்நிலையில், நேற்று (மார்ச்.26) நாம் தமிழர் கட்சியின் மாற்று வேட்பாளர்கள் இரண்டு பேர் தங்களது வேட்பு மனுவை தாக்கல் செய்ய கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர். 

அப்போது, ஒரு வேட்பாளருடன் ஐந்து பேர் மட்டுமே உள்ளே செல்ல அனுமதி உள்ள நிலையில், மூன்று பேர் மட்டும் உள்ளே செல்ல போலீசார் அனுமதித்ததாகவும், வேட்பு மனு தாக்கல் செய்ய தேவையான ஆவணங்களை கொண்டு சென்ற தங்களை தடுத்து நிறுத்தியதாக அக்கட்சியினர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும், வேட்பு மனு தாக்கல் செய்ய திமுக வேட்பாளர் வருவதற்கு முன்னதாகவே ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நின்று கொண்டிருந்த நிலையில், வேட்பு மனு தாக்கல் செய்ய ஆவணங்களுடன் வந்த தங்களை போலீசார் தடுத்து நிறுத்தியதாக ஆவேசமடைந்தனர். 

எங்களை தடுத்ததை போல உங்களால் பாஜகவினரிடம் கூற முடியுமா..? என்று காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் ஆட்சியர் அலுவலகம் முன்பு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் பங்குனி உத்திரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Coimbatore மாவட்டம் பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திரம் திருத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்து...

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...

உடுமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் போட்டியிடுவ...

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை சோதனைக்கு இன்று ஓட்டம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை சந்தேகம் தெரிவித்ததை அடுத்து, ஹிந்து அமைப்பி...