கோவை தொண்டாமுத்தூரில் போலீசார் கொடி அணிவகுப்பு..!

தொண்டாமுத்தூர் சார்பு பதிவாளர் அலுவலகத்தில் இருந்து புதுப்பாளையம் பிரிவு வரை சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு, காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் தலைமையில் இன்று கொடி அணிவகுப்பு நடைபெற்றது.


கோவை: வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி தமிழகம் முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மக்கள் பயமின்றி வாக்களிக்கவும் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக, அந்தந்த மாவட்ட காவல் துறை சார்பாக கொடி அணிவகுப்பு நடைபெறுவது வழக்கம்.

அதன்படி, இன்று கோவையில் காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் தலைமையில் இன்று (மார்ச்.25) கொடி அணிவகுப்பு நடைபெற்றது. 

தொண்டாமுத்தூர் சார்பு பதிவாளர் அலுவலகத்தில் இருந்து புதுப்பாளையம் பிரிவு வரை சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு அணிவகுப்பு நடைபெற்றது.

மாவட்ட காவல் துறையினர், ஊர்க்காவல் படையினர், மத்திய பாதுகாப்பு படையினர், கூடுதல் காவல் கண்காணிப்பாளர், துணை காவல் கண்காணிப்பாளர், ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள், என 200 பேருக்கு மேற்பட்ட காவல்துறையினர் கொடி அணிவகுப்பில் கலந்து கொண்டனர்.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...