நத்தக்காடையூர் அருகே பாராளுமன்ற தேர்தல் புறக்கணிப்பதாக கிராம மக்கள் பிளக்ஸ் வைத்ததால் பரபரப்பு..!

ஒவ்வொரு தேர்தலின் போது வாக்கு கேட்டு வரும் வேட்பாளர்கள், தேர்தலில் வெற்றி பெற்று பாலத்தை சரி செய்து கொடுப்பதாக வாக்குறுதி அளித்துவிட்டு, தேர்தல் முடிந்தவுடன் தங்கள் பகுதி மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை மறந்து விடுவதாக குற்றம்சாட்டினர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் நத்தக்காடையூர் அருகே உள்ள உலகுடையார் பாளையத்தில் கிராம மக்கள் பாராளுமன்ற தேர்தல் புறக்கணிக்க போவதாக பிளக்ஸ் வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும், சட்டமன்ற தேர்தலின் போது சேதமடைந்த பாலத்தை சரிசெய்து கட்டிக் கொடுப்பதாக வாக்குறுதி கொடுத்துவிட்டு, நிறைவேற்றாததால் பொதுமக்கள் ஆவேசம் அடைந்து ஈரோடு - பழனி பிரதான சாலை அருகே பிளக்ஸ் வைத்து எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். மேலும் தினமும் சேதமடைந்த பாலத்தின் வழியாக பள்ளி வேன்கள், கிராம மக்கள் செல்வதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாகவும், கூடிய விரைவில் நடவடிக்கை எடுக்கவேண்டும் இல்லை என்றால் வாக்களிக்கப்போவதில்லை என்றனர்.

காங்கேயம் நத்தக்காடையூர் அருகே உள்ள உலகுடையார் பாளையம். இந்த கிராமமானது 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசித்து வருகின்றனர். உலகுடையார் பாளையம் ஊரின் மையப்பகுதியில் பாலம் ஒன்று உள்ளது. பாலத்தின் கீழ் செல்லும் நீரானது கால்வாய் மாற்று உரம்பு நீர் குளத்திற்கு சென்றடைகின்றது.



இந்த பாலமானது கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக பலத்த சேதமடைந்து குண்டும் குழியுமாக மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது.

இதுகுறித்து பலமுறை ஊராட்சி மன்றத்திலும் காங்கேயம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் புகார் கொடுத்தும் எவ்வித பயனும் இல்லை என்கின்றனர். ஒவ்வொரு தேர்தலின் போது வாக்கு கேட்க வரும் வேட்பாளர்கள் உடனடியாக தேர்தலில் வெற்றி பெற்று வந்தவுடன் பாலத்தை சரி செய்து கொடுப்பதாக வெற்று வாக்குறுதியாக தெரிவித்துவிட்டு செல்கின்றனர். பின்னர் தேர்தல் முடிந்தவுடன் எங்கள் பகுதி மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை மறந்து விடுகின்றனர்.

மேலும், இவ்வழியாக வேலைக்கு போகும் பொதுமக்கள் மற்றும் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளை அழைத்துக்கொண்டு பள்ளி வேன்கள் பாலத்தை கடந்து செல்கிறது. பாலமே பழுதடைந்து உள்ளதால் இதை கடந்து செல்லும் போது விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அவ்வாறு விபத்து நடைபெறும் முன்னரே இதை சரிசெய்து கொடுக்கவேண்டும் என கோரிக்கை முன்வைக்கின்றனர். அதேசமயம், இப்பாலத்தை தவிர்த்து நத்தக்காடையூர் மற்றும் நால்ரோடு வழியாக காங்கேயம் மற்றும் ஈரோடு பகுதிகளுக்குச் செல்ல முடியும் ஆனால், சுமார் 3 முதல் 6 கிலோமீட்டர் வரை சுற்றிச் செல்ல வேண்டிய நிலை உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

இந்த பாலத்தை சரிசெய்து சாலைகளை புதுப்பித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விடவேண்டும். இல்லை என்றால் கிராம மக்கள் பாராளுமன்ற தேர்தல் புறக்கணிக்க போவதாகவும் அதனால் தான் பிளக்ஸ் வைத்து அரசுக்கு எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர் என்கின்றனர்.

மேலும் சட்டமன்றத் தேர்தலின் போது சேதமடைந்த பாலத்தை சரி செய்து கட்டிக் கொடுப்பதாக வாக்குறுதி கொடுத்து விட்டு நிறைவேற்றாததால் பொதுமக்கள் ஆவேசம் அடைந்து ஈரோடு பழனி பிரதான சாலை அருகே பிளக்ஸ் வைத்து எதிர்ப்பை தெரிவித்து வருவதாகவும். உடனடியாக கோரிக்கை நிறைவேற்றவில்லை என்றால் அடுத்த கட்ட போராட்டத்திற்குச் செல்வதாகவும் ஊர் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.



மேலும் இந்த பாலத்தின் வழியாக செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்காமல் இருக்க ஊர் பொதுமக்கள் ஒன்று சேர்ந்து பாலத்தின் மீது மண் மற்றும் தேங்காய் மஞ்சிகளை கொட்டிவைத்து நீண்டநாட்களாக விபத்தை தவிர்த்து வருகின்றனர்.

Newsletter

வெள்ளியங்கிரி மலையில் பக்தர் திடீர் உயிரிழப்பு: வனத்துறை விசாரணை

கோவை வெள்ளியங்கிரி மலையில் தரிசனம் சென்ற மதுக்கரையைச் சேர்ந்த மயில்சாமி என்பவர் பூண்டி நான்காவது மலையில் உயிரிழந்து கிடந...

சத்தி சாலையில் அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து - இளைஞர் பலி

கோவை மாவட்டம் அன்னூர் சத்தி சாலையில் நேற்று மாலை அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரின் ஓட்டுநர...

கோவில்மேடு பாலகக் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி திருட்டு - சிசிடிவி காட்சிகள் வைரல்

கோவை கோவில்மேடு பகுதியில் பால் முகவர் டேவிட்டின் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி இருசக்கர வாகனத்தில் வந்து பால் பாக்கெட்...

கோவை மாவட்டத்தில் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar, 2027ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளார். கலை, இலக்...

Zero G 2026 Fest: Park Group of Institutions Announces ‘Sakthi’ and ‘Nambikkai’ Scholarships

Dr. Anusha Ravi, Chief Executive Officer of the Park Group of Institutions, announced two new scholarship initiatives —...

பார்க் கல்விக் குழுமத்தின் “Zero G 2026” விழா: ‘சக்தி’ மற்றும் ‘நம்பிக்கை’ என புதிய கல்வி உதவித்தொகைகள் அறிவிப்பு.

பார்க் கல்விக் குழுமம் நடத்திய “Zero G 2026” கலாச்சார விழாவில், மாணவர்களுக்கான “நம்பிக்கை” மற்றும் “சக்தி” என்ற புதிய கல...