திருப்பூரில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டுவரப்பட்ட 14 லட்சம் ரூபாய் பறிமுதல் – பறக்கும் படையினர் நடவடிக்கை

திருப்பூர் கோவை சேலம் நெடுஞ்சாலையில் உள்ள ரவுண்டான பகுதியில் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் மதுரை மாவட்டம் சிவகங்கை பகுதியைச் சேர்ந்த ரஹ்மத்துல்லாஹ் என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட 14 லட்சத்து 94 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் பறக்கும் படை C பிரிவு வாகனம் அவிநாசி தோட்டக்கலை உதவி இயக்குனர் மோகனா தலைமையில், உதவி ஆய்வாளர் பழனியம்மாள், தலைமை காவலர் துரைபாபு, காவலர்கள் ஐதீஷ், பொன்ரகுராஜன் ஆகியோர் கொண்ட குழு சோதனைக்காக திருப்பூர் கோவை சேலம் நெடுஞ்சாலையில் உள்ள ரவுண்டான பகுதியில் இருக்கும் கிருஷ்ணா பேக்கரி அருகே அதிகாலை முதல் சோதனை செய்து கொண்டிருந்தனர்.

இங்கு தனியார் சொகுசு பேருந்துகள் பயணிகளை இறக்கி, ஏற்றிச் செல்லும் இடமான அந்த பகுதியில், சென்னையில் இருந்து கோவை வந்த A1 Travels சொகுசு பேருந்தில் இருந்து இறங்கிய இளைஞர் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டும், செல்போன் உபயோகித்துக் கொண்டும் இருப்பதை கண்ட பறக்கும் படை அதிகாரிகள் குழு அந்த இளைஞரிடம் விசாரணை மேற்கொடனர். மேலும் அவரது பைகளை சோதனை செய்ததில் கருப்பு கலர் கேரிபேக் பையில் பணத்தை கட்டி தனது பேக்கில் வைத்திருப்பது தெரியவந்தது.



இதுதொடர்பாக மேற்கொண்ட விசாரணையில், மதுரை சிவகங்கை பகுதியைச் சேர்ந்த ரஹ்மத்துல்லாஹ் (27) என்பதும், அவரது பையில், உரிய ஆவணங்கள் இன்றி 500 ரூபாய் பண்டல் 14 லட்சத்து 94 ஆயிரம் ரூபாய் இருப்பதும் தெரியவந்தது.

திருப்பூர் மண்ணரை பகுதியை சேர்ந்த அரவிந்த் ராஜ் (25) என்ற இளைஞர் ரஹ்மத்துல்லாஹ்வை அழைத்துச் செல்ல ஸ்கூட்டரில் வந்துள்ளார்.அவரும் பணம் குறித்து முன்னுக்குப் பின் முரணாக பதில் சொல்லவே, உடனடியாக பறக்கும் படையினர் 14.94 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்து வருமானவரித் துறையினரிடம் ஒப்படைத்தனர்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...