கோவை விஜயா வாசகர் வட்டத்தின் 2024-ஆம் ஆண்டுக்கான உலக புத்தக தின விருதுகள் அறிவிப்பு

ஜெயகாந்தன் விருதுக்கு எழுத்தாளா் எஸ்.சங்கரநாராயணன் (சென்னை), புதுமைப்பித்தன் விருதுக்கு எழுத்தாளா் மயிலன் எ.சின்னப்பன் (திருச்சி), மீரா விருதுக்கு கவிஞா் மா.ஸ்டாலின் சரவணன் (புதுக்கோட்டை) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.


கோவை: கோவை விஜயா வாசகா் வட்டத்தின் 2024-ஆம் ஆண்டுக்கான உலக புத்தக தின விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இது குறித்து விஜயா பதிப்பக நிறுவனா் மு.வேலாயுதம் (மார்ச்.19) கூறியிருப்பதாவது, உலக புத்தக தினத்தை (ஏப்ரல் 23) முன்னிட்டு ஆண்டுதோறும் கோவை விஜயா பதிப்பகத்தின் விஜயா வாசகா் வட்டம் சார்பில் எழுத்தாளா்கள் ஜெயகாந்தன், மீரா, புதுமைப்பித்தன் ஆகியோரின் பெயரால் எழுத்தாளா்களுக்கு விருதும், பரிசுத் தொகையும் வழங்கப்பட்டு வருகிறது. இது தவிர சிறந்த விற்பனையாளருக்கு வானதி விருதும், சிறந்த நூலகருக்கு சக்தி வை.கோவிந்தன் விருதும் வழங்கப்படுகிறது.

2024-ஆம் ஆண்டுக்கான விஜயா வாசகா் வட்ட விருதுகளுக்கான எழுத்தாளா்களைத் தோ்வுக் குழு தோ்ந்தெடுத்துள்ளது. அதன்படி ஜெயகாந்தன் விருதுக்கு எழுத்தாளா் எஸ். சங்கரநாராயணன் (சென்னை), புதுமைப்பித்தன் விருதுக்கு எழுத்தாளா் மயிலன் எ.சின்னப்பன் (திருச்சி), மீரா விருதுக்கு கவிஞா் மா.ஸ்டாலின் சரவணன் (புதுக்கோட்டை) ஆகியோர் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

சிறந்த புத்தக விற்பனையாளருக்கான வானதி விருது கும்பகோணம் ஸ்ரீ மார்க்கண்டேயா புக் கேலரி ஜே.கல்யாணசுந்தரத்துக்கும், சிறந்த நூலகருக்கான சக்தி வை.கோவிந்தன் விருது, சென்னை திருவொற்றியூா் முழுநேர அரசு கிளை நூலகத்தின் இரண்டாம் நிலை நூலகா் பா.பேனிக் பாண்டியனுக்கும் வழங்கப்பட உள்ளது.

ஜெயகாந்தன் விருதுக்கு ரூ.1 லட்சம், புதுமைப்பித்தன், மீரா, வானதி, சக்தி வை.கோவிந்தன் விருதுகளுக்கு தலா ரூ.25 ஆயிரமும் ரொக்கப் பரிசு வழங்கப்படுகிறது. 9-ஆவது ஆண்டாக நடைபெற இருக்கும் விஜயா வாசகா் வட்ட விருதுகள் வழங்கும் விழா, உலக புத்தக தினமான ஏப்ரல் 23-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) ராஜ வீதி விஜயா பதிப்பகத்தின் மேல்தளத்தில் உள்ள ரோஜா முத்தையா அரங்கில் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.

Newsletter

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...

ஆழியாறு அணை நீர்மட்டம் 65.4 அடியாக உயர்வு

ஆனைமலை ஆழியாறு அணையின் நீர்மட்டம் மே 26 நிலவரப்படி 65.4 அடியாக உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக வினாட...

காலவரையற்ற வேலை நிறுத்தம்: திருப்பூர் மாவட்டத்தில் 197 டாஸ்மாக் கடைகள் மூடல்

திருப்பூரில் காலி மது பாட்டில்கள் மீட்பு பணிக்கு தனி ஊழியர் நியமனம் கோரி டாஸ்மாக் பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்....