ஊழலை பற்றி பேசுவதற்கு திமுகவுக்கு எந்த அருகதையும் கிடையாது – கோவையில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேட்டி

இந்த நாடு வல்லரசு நாடாக ஆக வேண்டும். இந்த நாட்டின் முகம் மாறி இருக்கிறது. நீலகிரியில் அதிகமான வேலைகளை செய்திருக்கிறோம். கட்சி நிற்க சொன்னால் அங்கு நிற்போம் என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.



கோவை: கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் சந்தித்தார். அப்போது அவர் பேசியாதவது, இன்று கோவையில் பிரதமர் கலந்து கொள்ளும் பிரமாணமான ரோட் ஷோ நடக்க உள்ளது. பொதுமக்களின் பேராதர்வோடு கடந்த ஐந்து நாட்களாக பிரதமர் தென் இந்தியா முழுவதும் தன் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு இருக்கிறார். நாளை சேலத்தில் பிரமாண்டமான பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது .கடந்த ஒரு வாரமாக தென்னிந்தியா முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு இருக்கிறோம்.

பிரதமரின் வருகை தமிழகத்தில், மேலும் பாஜகவிற்கு மிகப்பெரிய ஊக்கத்தை தந்திருக்கிறது. தமிழ் மக்களுக்கு மிகப்பெரிய நம்பிக்கையை கொடுத்து இருக்கிறது. பிரதமர் வருகை கடந்த 10 ஆண்டுகளாக சிறந்த நல்லாட்சியை கொடுத்துக் கொண்டிருக்கிறது. இந்தியாவை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வது தான் பிரதமரின் ஒரே எண்ணமாக இருக்கிறது. அடுத்த 25 ஆண்டுகளுக்கு பிக்சின் பாரத் என்ற வளர்ச்சியடைந்த பாரதம் என்பதை தொடர்பாக திட்டங்களை கொடுத்திருக்கிறார் பிரதமர்.



இந்த நாடு வல்லரசு நாடாக ஆக வேண்டும். இந்த நாட்டின் முகம் மாறி இருக்கிறது. மக்களும் பாஜகவுக்கு குறிப்பாக தமிழகத்தில் ஆதரவிருப்பதை பார்க்க முடிகிறது. கோவை மக்கள் பேரன்போடு வரவேற்புக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள். தேசத்தின் வளர்ச்சி யார் செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது தெரியும்?. தேசத்துக்கு எதிரானது யார் என்பது தெரியும்?. தேசத்தை கொள்ளை அடிப்பவர்கள் யார் என்பது தெரியும்? இந்திய கூட்டணியின் 2ஜி ஊழல் முறையீடு நடந்து வருகிறது.

திமுக அவர்களின் அமைப்புகளை ஏவி விட்டு தான் தேர்தல் பத்திரங்களை பெற்றார்களா? ஆகாயத்தில் ஊழல் செய்தது யார் 2ஜியில் ஊழல் செய்தது யார்? திமுகவைச் சேர்ந்தவர்கள் ஊழலை பற்றி பேசுவதற்கு திமுகவுக்கு எந்த அருகதையும் கிடையாது. நீலகிரியில் அதிகமான வேலைகளை செய்திருக்கிறோம். கட்சி நிற்க சொன்னால் அங்கு நிற்போம். இவ்வாறு அவர் பேசினார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...