பாராளுமன்ற தேர்தல் குறித்து காங்கேயத்தில் தேர்தல் அலுவலர் தலைமையில் ஆலோசனை கூட்டம்

ஈரோடு பாராளுமன்ற தொகுதி உதவி தேர்தல் அலுவலர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள தேர்தல் கண்காணிப்பு குழுவினருக்கு தேர்தல் புகார்களை கையாளுவது எப்படி என்பது குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டன.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் சென்னிமலை சாலையில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஈரோடு பாராளுமன்ற தொகுதி உதவி தேர்தல் அலுவலர் தலைமையில் காங்கேயம் சட்டமன்ற தொகுதிக்கான தேர்தல் தொடர்பான மண்டல அலுவலர்கள் கண்காணிப்பு குறித்தும், பறக்கும் படை அதிகாரிகளுடனும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

பாராளுமன்றத் தேர்தல் அடுத்த மாதம் ஏப்ரல் 19ஆம் தேதி நடக்க உள்ளது. தேர்தல் சமயத்தில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதை தடுக்கும் வழிவகைகள், பரிசு பொருட்கள் வழங்குவதை தடுத்து பறிமுதல் செய்வது, பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழுக்கள் ஆகியவை அனைத்து பகுதிகளிலும் அமைக்கப்பட்டுள்ளன.



தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள இந்த தேர்தல் கண்காணிப்பு குழுவினருக்கு தேர்தல் புகார்களை கையாளுவது எப்படி என்பது குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டது. இந்த ஆலோசனை கூட்டத்தில் உதவி தேர்தல் அலுவலர் ராம்குமார், காங்கேயம் வட்டாட்சியர் மயில்சாமி, அலுவலக மேலாளர் அருணா, நில வருவாய் ஆய்வாளர்கள் விதுர் வேந்தன், சுந்தரி, சந்திரகலா, காங்கேயம் நகராட்சி ஆணையாளர் கனிராஜ், முத்தூர் பேரூராட்சி செயல் அலுவலர் ஆல்பர்ட் மற்றும் காவல்துறையினர்,, வருவாய்த் துறையினர் உட்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவை மாநகராட்சி ஆணையர் வாகன நிறுத்துமிடம் மற்றும் குடிநீர் பணிகளை ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, ஆர்.எஸ்.புரம் பல்நிலை வாகன நிறுத்துமிடம் மற்றும் மத்திய மண்டல பகுதிகளில்...

மாநில அளவில் முதலிடம் பெற்ற கோவை மாநகராட்சி: அலுவலர்கள், களப்பணியாளர்களுக்கு மேயர் நன்றி..!

மாநில அளவில் சிறந்த மாநகராட்சிக்கான முதல் பரிசைப் கோவை பெற்றதற்காக, மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள், தூய்மைப் பணியாளர...

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு அமைப்பு தொடக்கம்

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு அமைப்பு தொடங்கப்பட்டது. விழாவில் 120-க்கும் மேற்பட்ட மாணவர்கள், பேராசிரிய...

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் பெரும் தீ விபத்து: 100 ஊழியர்கள், 36 வாகனங்களுடன் மாநகராட்சி போராட்டம்

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் 3.1 ஏக்கரில் ஏற்பட்ட தீ விபத்தை கட்டுப்படுத்த மாநகராட்சி ஆணையர் தலைமையில் 100 பணியாளர்கள்,...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் இந்திய அறிவு மரபு அடிப்படையில் வரலட்சுமி பூஜை சிறப்பாக நடைபெற்றது

கற்பகம் அகாடமி ஆஃப் ஹையர் எஜுகேஷன் பல்கலைக்கழகத்தின் இசைத்துறை மற்றும் நடனத்துறை சார்பில் வரலட்சுமி பூஜை இந்திய அறிவு மர...

கோவையில் 1,400 போதை மாத்திரைகள், 300 கிராம் கஞ்சா பறிமுதல் - கணவன், மனைவி கைது

கோவைபுதூர் பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கணவன், மனைவி இருவரை குனியமுத்தூர் போலீசார் கை...