நஞ்சியம்பாளையத்தில் ரூ.1 கோடியே 85 லட்சம் மதிப்பில் சார்பதிவாளர் அலுவலகம் கட்டுவதற்கான பூமி பூஜை

ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் எஸ்.வி.செந்தில்குமார் கலந்து கொண்டு நஞ்சியம்பாளையம் ஊராட்சி பகுதியில் புதிய சார் பதிவாளர் அலுவலகம் ரூ.1 கோடியே 85 லட்சம் மதிப்பில் கட்டப்பட உள்ள பணியினை பூமி பூஜை போட்டு தொடங்கி வைத்தார்.


திருப்பூர்: தாராபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட நஞ்சியம்பாளையம் ஊராட்சி பகுதியில் புதிய சார் பதிவாளர் அலுவலகம் ரூ.1 கோடியே 85 லட்சம் மதிப்பில் கட்டப்பட உள்ளது. இதற்கான பூமி பூஜை நடந்தது. இதில் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் எஸ்.வி.செந்தில்குமார் கலந்து கொண்டு பணியை தொடங்கி வைத்தார்.

இதில் தாராபுரம் நகராட்சி தலைவர் கு.பாப்புகண்ணன், ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவர் இ.சசிக்குமார், தலைமை செயற்குழு உறுப்பினர் கே.எஸ்.தனசேகர், பொதுக்குழு உறுப்பினர் ஆர்.சிவகுமார், மாவட்டத் துணைச் செயலாளர் பிரபாவதி பெரியசாமி, ஒன்றிய அவைத் தலைவர் செல்லமுத்து, மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் செல்லமுத்து, தொ.மு.ச. மண்டல தலைவர் துரைசாமி, தேர்பட்டி பழனிச்சாமி, ஒன்றிய துணை செயலாளர் செல்வகுமார், இளைஞரணி அமைப்பாளர் சன்பாலு, கொளத்துப்பாளையம் பேரூராட்சி தலைவர் சுதாகருப்புசாமி, ஒன்றிய வர்த்தக அணி அமைப்பாளர் ரோகிணி ராஜேந்திரன், ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் வீரசுந்தரி சுப்பிரமணி, நகர அவைத் தலைவர் ப.கதிரவன், நகர் மன்ற உறுப்பினர் ஹைடெக் அன்பழகன், ஸ்ரீதர், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் ஆனந்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...