மாணவர்கள் போதை பொருட்களுக்கு அடிமையாகக் கூடாது - கோவில்பாளையத்தில் இரத்தினம் டிப்ஸ் குளோபல் கல்லூரி திறப்பு விழாவில் நடிகர் ஆரி அறிவுரை

நடிகர் விஜய் தொடங்கியுள்ள கட்சியில் சேர்வதாக இருந்தால் சொல்லிவிட்டு சேருவேன் போக மாட்டேன். நடிகர் விஜய் வெகு நாட்களாக திட்டமிட்டு அரசியலுக்குள் வந்திருக்கின்றார் என்று நடிகர் ஆரி அர்ஜூனன் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை மாநகரின் மத்தியில் 50 வருடத்துக்கும் மேலாக கல்விச் சேவையில் சிறந்து விளங்கும் இரத்தினம் கல்விக் குழுமங்கள் சார்பில் கோவில்பாளையத்தில் இரத்தினம் டிப்ஸ் குளோபல் கல்லூரி திறக்கப்பட்டது. விழாவிற்கு இரத்தினம் கல்விக் குழுமங்களின் தலைவர் மதன்.ஆ.செந்தில் தலைமை தாங்கினார். விழாவில் நடிகர் ஆரி அர்ஜுனன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியாதவது, All to gather. Grow to gather. அனைவரும் ஒன்றாக இருங்கள் ஒன்றாகவே வளருங்கள் விஜய் கட்சியில் சேர்வீர்களா என்ற கேள்விக்கு பதில் அளித்த ஆரி நான் சேர்வதாக இருந்தால் சொல்லிவிட்டு சேருவேன் போக மாட்டேன். நடிகர் விஜய் வெகு நாட்களாக திட்டமிட்டு அரசியலுக்குள் வந்திருக்கின்றார். அவரை வரவேற்கின்றோம் வாழ்த்துகின்றோம் நல்ல அரசியல் தலைவர்களை எதிர்நோக்கி தமிழ்நாடு எப்பொழுதுமே காத்துக் கொண்டிருக்கின்றது.

நாம ஒவ்வொரு தலைவர்களும் நல்ல அரசியல் தலைவராக இருக்கின்றோமா என்ற ஒவ்வொரு கேள்வியுடன் ஒவ்வொரு தலைவர்களும் இருக்க வேண்டும். அதன் அடிப்படையில் மாற்றத்திற்கான தலைமை அப்படியே உருவாகின்றன. தலைமை அன்பு என்பது காமராஜர், பெரியார், அண்ணா, எம்ஜிஆர் இருந்த ஊர் இது. மறைந்த தலைவர்களை இன்றும் நாம் நினைவில் வைத்து பேசுகின்றோம் என்றால் அவர்களின் புகழ் இன்றளவும் இருக்கின்றன எப்படி அரசியலில் வருகிறோம் என்பது முக்கியமல்ல.



அரசியல் என்ன செய்கிறோம் என்பதே முக்கியம். அதற்காக தளபதி விஜய் அவர்களுக்கு ஒரு நல்ல அரசியல் மாற்றத்திற்கான முயற்சிக்கும் அவரது கொள்கைகளுக்கும் வாழ்த்துக்கள் தெரிவித்து இன்று நாம் ஜாதியாலும் மதத்தாலும் பிரிந்து இருக்கின்றோம். ஆனால் கல்லூரியில் மட்டுமே பிரண்ட்ஸ் போல யாரு மச்சான் என நட்பை பேணி வருகின்றோம். இன்றைய நவீன காலத்தில் என்ன கேட்டாலும் ஏ.ஐ. தரும் நட்பை கேட்டால் ஏ.ஐ-யால் தர முடியாது. நண்பர்கள் பிரண்ட்ஷிப்பை புரிந்து கொள்ள வேண்டும். நண்பர்களுக்கும் நெட்வொர்க் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். கல்லூரி மாணவர்கள் போதை பொருட்களுக்கு அடிமையாகக் கூடாது. அவ்வாறு அடிமையாகும் சக நண்பர்களை நண்பர்களே கண்டிக்க வேண்டும்.

பெற்றோர்களுக்கு தெரியாத விசயங்களும் நண்பர்களுக்கு தெரிய வரும். கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் தவறான வழியில் சென்றால் முதலில் அந்த கல்லூரியில் படிக்கும் சக மாணவர்களுக்கே தெரியும் என்பதால் நண்பர்களே அதனை தடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...