மகளிர் உரிமைத் தொகை பற்றி பேசிய குஷ்புவை கண்டித்து உடுமலையில் திமுக மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம்

மகளிர் உரிமை தொகை குறித்து பேசி பெண்களை நடிகை குஷ்பு அவமதித்துவிட்டதாக கூறி திருப்பூர் தெற்கு மாவட்ட திமுக மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டர் அணி சார்பில் உடுமலை மத்திய பஸ் நிலையத்தின் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


திருப்பூர்: மகளிர் உரிமை தொகை குறித்து பெண்களை அவமதிக்கும் வகையில் பேசிய பாஜக நிர்வாகி குஷ்புவை கண்டித்து திருப்பூர் தெற்கு மாவட்ட திமுக மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டர் அணி சார்பில் உடுமலை மத்திய பஸ் நிலையத்தின் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் அனிதா செல்வராஜ், மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர் லதா லட்சுமி நாராயணன் ஆகியோர் தலைமை வகித்தனர். அதைத் தொடர்ந்து மகளிர் அணியினர் குஷ்புவை கண்டித்து கோசங்களை எழுப்பியதுடன், மத்திய அரசை கண்டித்தும் பேசினார்கள்.

இறுதியாக குஷ்புவின் உருவப்படத்தை செருப்பால் அடித்தும் தீ வைத்தும் கண்டனத்தை தெரிவித்தனர். இந்த நிகழ்வில் மாவட்ட பொருளாளர் முபாரக் அலி, உடுமலை நகரச் செயலாளர் சி.வேலுச்சாமி, துணைச் செயலாளர் வக்கீல் எஸ்.செந்தில்குமார், நகர மன்ற தலைவர் மு.மத்தீன், உடுமலை ஒன்றியக் குழு தலைவர் மகாலட்சுமி முருகன், உள்ளிட்ட ஒன்றிய, நகர, சார்பு அணிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...

கோவையை உலகத் தர நகரமாக மாற்ற கருத்தரங்கம்

கோவை நவஇந்தியாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” கருத்தரங...

மகாவீர் ஜெயந்தி: மார்ச் 31ல் இறைச்சி விற்பனைக்கு தடை - கோயம்புத்தூர் மாநகராட்சி அறிவிப்பு

மகாவீர் ஜெயந்தி விழாவையொட்டி மார்ச் 31, 2026 அன்று கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் அனைத்து விதமான இறைச்சி விற்பனை மற்...

கவுண்டம்பாளையம் தொகுதியில் NTK வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலாமணி ஜெகநாதன் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தா...