இறக்குமதி வரி குறைத்தால் பவுனுக்கு ரூ.5,500 விலை குறையும் - கோவையில் தங்க நகை தயாரிப்பாளர்கள் விளக்கம்

மத்திய அரசு தங்கத்திற்கு இறக்குமதி வரி 15 சதவீதம் மற்றும் ஜிஎஸ்டி 3 சதவீதம் என மொத்தம் 18 சதவீதம் வரி விதிக்கிறது. இறக்குமதி வரியை 4 சதவீதமாக குறைத்தால் தற்போதைய சூழலில் ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.5,500 வரை குறையும் என கோவை தங்க நகை தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் முத்துவெங்கட்ராம் தெரிவித்துள்ளார்.



கோவை: தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது, திருமணம் உள்ளிட்ட பல்வேறு சுபநிகழ்ச்சிகளுக்கு தங்கம் வாங்குவோரை கவலை அடைய செய்துள்ளது. கோவையில் நேற்று (மார்ச் 13 புதன்கிழமை) மாலை ஒரு பவுன் ஆபரண தங்கம் 48,600-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இதுகுறித்து கோவை தங்க நகை தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் முத்துவெங்கட்ராம் கூறியதாவது,



தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் கோவை நகரில் தினசரி வர்த்தகம் 50 சதவீதமாக குறைந்துள்ளது. பெரும்பாலும் மக்கள் செயின், மோதிரம் உள்ளிட்ட சிறிய நகைகளை மட்டுமே வாங்க அதிக ஆர்வம் காட்டுகின்றனர். அதிக விலை காரணமாக மக்களின் வாங்கும் திறன் கணிசமாக குறைந்துள்ளது.

அமெரிக்காவில் உள்ள வங்கிகளில் வைப்பு தொகைக்கு வட்டி விகிதம் குறைக்க உள்ளதால் எதிர்வரும் நாட்களில் இந்தியாவில் தங்கத்தின் விலை மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய அரசு தங்கத்திற்கு இறக்குமதி வரி 15 சதவீதம் மற்றும் ஜிஎஸ்டி 3 சதவீதம் என மொத்தம் 18 சதவீதம் வரி விதிக்கிறது. இறக்குமதி வரியை 4 சதவீதமாக குறைத்தால் தற்போதைய சூழலில் ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.5,500 வரை குறையும். மக்கள் நலன் கருதி மத்திய அரசு இந்நடவடிக்கையை எடுக்க வேண்டும். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமனை நேரில் சந்தித்து சங்கம் சார்பில் மனு அளித்துள்ளோம் என்று அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் பரப்புரை..!

NDA ஆட்சி அமைந்தால், பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு ஏற்பட்ட அரசியல் சூழ்நிலை போன்று தமிழகத்திலும் நிலைமை உரு...

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...

தொண்டாமுத்தூரில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு பிரசாரம்

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக திமுக தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர...