ஜல்லிபட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் பாலியல் வன்கொடுமைக்கு எதிராக விழிப்புணர்வு - உடுமலை ஒன்றிய குழு தலைவர் பங்கேற்பு

ஜல்லிபட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள மாணவிகளுக்கு பாலியல் வன்கொடுமைக்கு எதிரான விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தில் நடனம், குறும்படம் மற்றும் வினாடி வினா போன்ற நிகழ்ச்சிகள் நடத்தபட்டது.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை ஜிவிஜி விசாலாட்சி மகளிர் கல்லூரி கணினி பயன்பாட்டு துறை மற்றும் டாக்டர் அப்துல் கலாம் பாதுகாப்பு சேவை அறக்கட்டளை இணைந்து இமைகள் திட்டத்தின் கீழ் மூன்றாம் ஆண்டு மாணவியர் ஜல்லிபட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள மாணவிகளுக்கு பாலியல் வன்கொடுமைக்கு எதிரான விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தில் நடனம், குறும்படம் மற்றும் வினாடி வினா போன்ற நிகழ்ச்சிகள் நடத்தபட்டது.



மேலும் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கேடயம் மற்றும் பதக்கங்களை உடுமலை ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மகாலட்சுமி முருகன், பிரியா பாராமெடிக்கல் இன்ஸ்டியூட் முதல்வர் தவசிமணி, அப்துல் கலாம் அறக்கட்டளை நிறுவனர் நவநீதன், ஆடிட்டர் கண்ணன் ஆகியோர் வழங்கினர்.

ஜல்லிப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பழனிச்சாமி மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஜிவிஜி விசாலாட்சி மகளிர் கல்லூரி கணினி பயன்பாட்டு துறை தலைமை பேராசிரியர் முனைவர் மணிமேகலை, வடிவு, கனக துர்கா, நித்யா ஆகியோர் செய்திருந்தனர்.

Newsletter

Coimbatore Court Convicts Two Govt School Teachers in Forged Salary Certificate Loan Case

The CBI Special Court in Coimbatore has sentenced Krishnagiri government school teachers T. Vinothkumar and Nithilan to...

போலி சான்றிதழ் காட்டி ரூ.25.5 லட்சம் மோசடி: இரு ஆசிரியர்களுக்கு 3½ ஆண்டு சிறை

கிருஷ்ணகிரி மாவட்டம் பாப்பனூர் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டி.வினோத்குமார் மற்றும் நிதிலன் ஆகியோர் போலி சம்பளச் சான்றிதழ் க...

கோவை முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இன்று மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச்...

கோவை வீரகேரளத்தில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து: ₹2 கோடி பொருட்கள் எரிந்து சாம்பல்

கோவை வடவள்ளி அருகே வீரகேரளம் சின்மயா நகர் பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா பிளாஸ்டிக் குடோனில் மின் கசிவு காரணமாக தீ விபத்து...

கோவையில் நாளை (19.09.2026) காந்திபுரம் உள்பட பல பகுதிகளில் மின்தடை

கோவை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 19, 2026 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மண...

கோவையில் ஏ.டி.எம். கொள்ளை முயற்சி - துப்புரவு தொழிலாளியால் கைது

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 3-வது வீதியில் உள்ள கரூர் வைஸ்யா வங்கி ஏ.டி.எம். மையத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்...