கோவையில் வரும் சனிக்கிழமை வரை அதிகபட்சமாக 38 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகும் என அறிவிப்பு

கோவையில் நேற்று 38 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவான நிலையில் வரும் சனிக்கிழமை வரை குறைந்த பட்சம் 24 டிகிரி செல்சியஸ் முதல் அதிகபட்சம் 38 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகுமென்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.


கோவை: சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (மார்ச்.11) வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவையில் நேற்று 38 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவான நிலையில் வரும் சனிக்கிழமை வரை குறைந்த பட்சம் 24 டிகிரி செல்சியஸ் முதல் அதிகபட்சம் 38 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகுமென்று வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

இதேபோல, சென்னையில் நேற்று 34 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவான நிலையில் இன்று (மார்ச்.11) முதல் வரும் வெள்ளிக்கிழமை (15ம் தேதி) வரை வெப்பம் 35 டிகிரி வரை பதிவாகும் என்றும், சனிக்கிழமை 36 டிகிரி வரை வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மதுரையில் நேற்று 38 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவான நிலையில் இன்று முதல் வரும் வியாழக்கிழமை (14ம் தேதி) வரை வெப்பம் 38 டிகிரி வரை பதிவாகுமென்றும், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் வெப்பம் 39 டிகிரி வரை பதிவாக வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் புதுவையில் நேற்று 34 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவான நிலையில், வரும் வியாழக்கிழமை (14ம் தேதி) வரை வெப்பம் 34 டிகிரி வரை பதிவாகும் என்றும், வெள்ளி, சனிக்கிழமையன்று 35 டிகிரி வரை வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

எனவே பொதுமக்கள் இந்த வானிலை முன்னறிவிற்புக்கு ஏற்ப தங்கள் பயணத் திட்டங்களை வகுத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Newsletter

பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் பங்குனி உத்திரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Coimbatore மாவட்டம் பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திரம் திருத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்து...

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...

உடுமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் போட்டியிடுவ...

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை சோதனைக்கு இன்று ஓட்டம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை சந்தேகம் தெரிவித்ததை அடுத்து, ஹிந்து அமைப்பி...