பொள்ளாச்சியில் பாஜக சார்பில் பாராளுமன்ற தேர்தல் வாக்குறுதி கோரிக்கை பெட்டி அறிமுகம்

பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டமன்றத் தொகுதிகளிலும் பாஜக சார்பில் உங்கள் விருப்பம் எங்கள் உத்தரவாதம், மீண்டும் மோடி வேண்டும் மோடி என அச்சிடப்பட்ட பெட்டி தயார் செய்யப்பட்டுள்ளது.


கோவை: பாராளுமன்ற தேர்தல் இன்னும் சில தினங்களில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் அரசியல் கட்சியினர் பொதுமக்களிடமிருந்து வாக்குகளை பெறுவதற்கு பல்வேறு வியூகங்களை வகுத்து வருகின்றனர்.

பாஜக சார்பில் தமிழகம் முழுவதும் அனைத்து பாராளுமன்ற தொகுதிகளிலும் பொதுமக்களிடமிருந்து கோரிக்கைகளை பெறுவதற்கு தேர்தல் வாக்குறுதி கோரிக்கை பெட்டி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.



இதன் ஒரு பகுதியாக பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டமன்றத் தொகுதிகளிலும் பாஜக சார்பில் உங்கள் விருப்பம் எங்கள் உத்தரவாதம், மீண்டும் மோடி வேண்டும் மோடி என அச்சிடப்பட்ட பெட்டி தயார் செய்யப்பட்டுள்ளது.

இந்த பாராளுமன்ற தேர்தல் வாக்குறுதி கோரிக்கை பெட்டி அறிமுக நிகழ்வு பொள்ளாச்சியில் உள்ள அக்கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.



இதில் கோவை தெற்கு மாவட்ட தலைவர் வசந்த ராஜன் பாஜகவினர் முன்னிலையில் பெட்டியை அறிமுகப்படுத்தினார்.



இது குறித்து மாவட்ட தலைவர் வசந்தராஜன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது, இந்த பெட்டி 6 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வைக்கப்பட்டு பொதுமக்கள் நீண்ட நாள் கோரிக்கைகளை மனுக்களை பெறப்பட்டு இதை பாஜகவின் தேர்தல் வாக்குறுதியாக தயார் செய்யப்பட்டு அந்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்.

கடந்த காலத்தில் தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் உங்கள் தொகுதியில் உங்கள் ஸ்டாலின் என்ற நிகழ்வுகள் மூலம் பொதுமக்களின் குறைகள் மற்றும் கோரிக்கைகள் என்ற தலைப்பில் புகார் பெட்டி வைத்து மனுக்களை பெற்றார். இப்பகுதியில் பொதுமக்கள் ஆனைமலையாறு, நல்லாறு திட்டம் செயல்படுத்தபடும், தேங்காய் விலை வீழ்ச்சியை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கபடும், தேங்காய் எண்ணெயை நியாய விலை கடைகளில் வழங்கபடும், மதுக்கடைகள் மூடப்படும், நகை கடன் ரத்து செய்யப்படும், அனைத்து இல்லத்தரசிகளுக்கும் மாதம் ஆயிரம் வழங்கப்படும் என்றார்கள்.

தற்போது 33% பெண்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. இது எந்த வாக்குறுதியிலும் நிறைவேற்றவில்லை. இவை அனைத்தும் கோரிக்கை மனுக்களாகவும் பெற்றனர். மாறாக இந்த பெட்டி மூலம் பெறப்படும் மனுக்கள் அனைத்தும் பிரதமர் மோடி ஆட்சி அமைந்தவுடன் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என்று தெரிவித்தார்.

Newsletter

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...