பொள்ளாச்சியில் உள்ள மகாலிங்கம் பொறியியல் கல்லூரியில் சர்வதேச மகளிர் தின விழா கொண்டாட்டம்

மகளிர் தின விழாவில் தொழில் மற்றும் சமூகத்துறையில் சேவையாற்றி வரும் கோவை பாவை இன்ஃப்ரோ ஜியோ டெக் நிறுவனத்தின் முதன்மை இயக்குனர் பிரசன்ன ராகினிக்கு யுவசக்தி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.



கோவை: பொள்ளாச்சி உடுமலை சாலையில் உள்ள மகாலிங்கம் பொறியியல் கல்லூரியில் NIA கல்வி நிறுவனங்கள் மற்றும் யுவசக்தி மகளிர் நல சங்கம் சார்பில் சர்வதேச மகளிர் தின விழா இன்று நடைபெற்றது.

NIA கல்வி நிறுவனங்களின் தலைவர் மாணிக்கம் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் தொழில் மற்றும் சமூகத்துறையில் சேவையாற்றி வரும் கோவை பாவை இன்ஃப்ரோ ஜியோ டெக் நிறுவனத்தின் முதன்மை இயக்குனர் பிரசன்ன ராகினிக்கு யுவசக்தி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.



மேலும் சுகுணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி பேராசிரியை சாந்தாமணி கலந்து கொண்டு சர்வதேச மகளிர் தின விழா சிறப்புரையாற்றினார். இதைத்தொடர்ந்து NIA கல்வி நிறுவனங்களில் பயின்று வரும் 10 மாணவிகளுக்கு 10 லட்சம் மதிப்புள்ள கல்வி உதவித்தொகையும் வழங்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய NIA கல்வி நிறுவனங்களின் தலைவர் மாணிக்கம், ஆண்டுதோறும் சர்வதேச மகளிர் தினத்தன்று NIA கல்வி நிறுவனங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரியில் பயின்று வரும் ஏழை மாணவிகளை மதிப்பெண் அடிப்படையில் தேர்தெடுத்து கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருவதாகவும், இந்த ஆண்டுக்கான மகளிர் தின விழாவில் 10 மாணவிகளுக்கு 10 லட்சம் ரூபாய் அளவிலான கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

Newsletter

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் பெரும் தீ விபத்து: 100 ஊழியர்கள், 36 வாகனங்களுடன் மாநகராட்சி போராட்டம்

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் 3.1 ஏக்கரில் ஏற்பட்ட தீ விபத்தை கட்டுப்படுத்த மாநகராட்சி ஆணையர் தலைமையில் 100 பணியாளர்கள்,...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் இந்திய அறிவு மரபு அடிப்படையில் வரலட்சுமி பூஜை சிறப்பாக நடைபெற்றது

கற்பகம் அகாடமி ஆஃப் ஹையர் எஜுகேஷன் பல்கலைக்கழகத்தின் இசைத்துறை மற்றும் நடனத்துறை சார்பில் வரலட்சுமி பூஜை இந்திய அறிவு மர...

கோவையில் 1,400 போதை மாத்திரைகள், 300 கிராம் கஞ்சா பறிமுதல் - கணவன், மனைவி கைது

கோவைபுதூர் பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கணவன், மனைவி இருவரை குனியமுத்தூர் போலீசார் கை...

கோவை வேளாண் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்தில் தொழில்துறை களப்பயணம்

கோவை வேளாண் பொறியியல் கல்லூரியின் 56 B.Tech மாணவர்கள் அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்திற்கு தொழில்முறை களப்பயணம் மேற்கொண்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் காலை 11 மணி...

கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்க...