கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கு புதிய அடையாள அட்டை – மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு

மார்ச் 8-இல் தெற்கு மண்டலம், மார்ச் 9 -இல் மத்திய மண்டலம், மார்ச் 11-இல் கிழக்கு மண்டலம், மார்ச் 12-இல் மேற்கு மண்டலத்தில் முகாம்கள் நடைபெறும் என மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் நேற்று (மார்ச்.7) வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை மாநகராட்சிப் பகுதியில் பிரதமரின் ஆத்மநிர்பா் நிதி திட்டத்தின்கீழ் பதிவு செய்த சாலையோர வியாபாரிகளுக்கு புதிய அடையாள அட்டை மற்றும் வியாபாரச் சான்றிதழ்கள், மாநகராட்சி பிரதான அலுவலக தனி முகாமில் வெள்ளிக்கிழமை முதல் அனைத்து வேலை நாள்களிலும் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை வழங்கப்படும்.

வடக்கு மண்டலத்தில் மார்ச் 7-ஆம் தேதி முகாம் நடைபெற்று முடிந்த நிலையில், மார்ச் 8-இல் தெற்கு மண்டலம், மார்ச் 9 -இல் மத்திய மண்டலம், மார்ச் 11-இல் கிழக்கு மண்டலம், மார்ச் 12-இல் மேற்கு மண்டலத்தில் முகாம்கள் நடைபெறும்.

எனவே, மாநகராட்சிப் பகுதிகளில் ஏற்கெனவே அடையாள அட்டைக்கான கணக்கெடுப்பில் பதிவு செய்த சாலையோர வியாபாரிகள், தங்களின் ஆதார் அட்டை நகலைக் காண்பித்து அடையாள அட்டையைப் பெற்றுக் கொள்ளலாம். இதற்காக எந்தக் கட்டணமும் செலுத்த வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...

தமிழ்ப் புத்தாண்டு: மருதமலை கோயிலுக்கு காா் தடை; பேருந்து சேவை அனுமதி

தமிழ்ப் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ல் கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு நான்கு சக்கர வாகனங்களில் செல்ல தடை விதி...

வால்பாறை சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர் சுதாகர் வேட்பு மனு தாக்கல்

வால்பாறை சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் குட்டி என்ற சுதாகர் ஏப்ரல் 7ஆம் தேதி வேட்பு மனுவை தாக்கல் செய்தார். ஆனைமலை...

சிங்காநல்லூரில் AIADMK வேட்பாளர் K.R. ஜெயராமன் வேட்புமனு தாக்கல்

சிங்காநல்லூர் தொகுதியில் AIADMK வேட்பாளர் K.R. ஜெயராமன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். தேர்தல் பணிமனை திறப்பு விழாவுக...