ஈஷாவில் யக்க்ஷா கலை நிகழ்ச்சி நிறைவு நாள் விழா - பத்மஶ்ரீ ஆனந்தா சங்கர் ஜெயந்தின் அசத்தல் நடன நிகழ்ச்சி

தியாகராஜர் மில் மற்றும் கல்வி நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் ஹரி தியாகராஜன் மற்றும் மெடிமிக்ஸ் குழுமத்தின் சோலையில் பிரைவேட் லிமிட்டட் நிறுவனத்தின் இயக்குனர் ஜெயதேவி சோலையில் ஆகியோர் யக்க்ஷா கலை நிகழ்ச்சி நிறைவு நாள் விழாவை குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.


கோவை: கோவை ஈஷா யோகா மையத்தில் நடைபெற்று வரும் யக்க்ஷா கலைத்திருவிழாவின், நிறைவு நாளில் பத்மஶ்ரீ ஆனந்தா சங்கர் ஜெயந்த் குழுவினர் நிகழ்த்திய பாரம்பரிய நடன நிகழ்ச்சி, பார்ப்போரை மெய் சிலிர்க்க செய்தது.

இத்திருவிழாவின் நிறைவு நாளான நேற்று(மார்ச் 7) தியாகராஜர் மில் மற்றும் கல்வி நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் ஹரி தியாகராஜன் மற்றும் மெடிமிக்ஸ் குழுமத்தின் சோலையில் பிரைவேட் லிமிட்டட் நிறுவனத்தின் இயக்குனர் ஜெயதேவி சோலையில் ஆகியோர் விழாவை குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.



அதனை தொடர்ந்து பத்மஸ்ரீ ஆனந்தா சங்கர் ஜெயந்த்தின் பாரம்பரிய நடன நிகழ்ச்சி நடைபெற்றது. அவரும், அவருடைய குழுவினரும் நந்தி மற்றும் சிம்ஹ கதைகளை தங்கள் எழிலான நடனத்தின் மூலம் மீட்டுருவாக்கினர். இந்த குழுவில் 20 பெண் நடனக் கலைஞர்களும், 3 ஆண் நடனக்கலைஞர்களும் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.



ஒரு மணி நேரத்திற்கு மேல் நடைபெற்ற இந்த அற்புத நடன நிகழ்ச்சியில் பார்வையாளர்கள் மூழ்கி திளைத்தனர். இந்நிகழ்ச்சியை தமிழகம் மட்டுமின்றி, பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்களும் மற்றும் வெளிநாட்டவர்களும் கண்டு ரசித்தனர்.

இவர் இந்தியாவின் தலைச் சிறந்த நடன கலைஞர் பரதநாட்டியம் மற்றும் குச்சிப்புடி இரு நடன கலைகளிலும் தேர்ச்சி பெற்றவர். மேலும், சங்கரானந்த கலாஷேத்ரா எனும் புகழ்பெற்ற அமைப்பை கலை இயக்குனராக வழிநடத்தி வருகிறார்.



கோவை ஈஷா யோக மையத்தில் 30 ஆம் ஆண்டாக மஹாசிவராத்திரி விழா இன்று மார்ச் 8 ஆம் தேதி மிகப் பிரம்மாண்டமாக கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு பாரதத்தின் பாரம்பரியக் கலைகளை பறைசாற்றும், யக்க்ஷா கலைத் திருவிழா கோவை ஈஷா யோகா மையத்தில் நடந்து வருகிறது. இந்நிகழ்ச்சி கலாச்சாரம், இசை மற்றும் நடனத்தின் செறிவை பறைசாற்றும் விதமாக உலகப் புகழ்பெற்ற கலைஞர்களை கொண்டு நடத்தப்படுகிறது.

Newsletter

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...

தமிழ்ப் புத்தாண்டு: மருதமலை கோயிலுக்கு காா் தடை; பேருந்து சேவை அனுமதி

தமிழ்ப் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ல் கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு நான்கு சக்கர வாகனங்களில் செல்ல தடை விதி...

வால்பாறை சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர் சுதாகர் வேட்பு மனு தாக்கல்

வால்பாறை சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் குட்டி என்ற சுதாகர் ஏப்ரல் 7ஆம் தேதி வேட்பு மனுவை தாக்கல் செய்தார். ஆனைமலை...

சிங்காநல்லூரில் AIADMK வேட்பாளர் K.R. ஜெயராமன் வேட்புமனு தாக்கல்

சிங்காநல்லூர் தொகுதியில் AIADMK வேட்பாளர் K.R. ஜெயராமன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். தேர்தல் பணிமனை திறப்பு விழாவுக...