உடுமலை பழனி தேசிய நெடுஞ்சாலையில் திடீர் தீ விபத்து - புகை மூட்டத்தால் வாகன ஓட்டிகள் அவதி

குப்பைகள், முட் செடிகளில் எவ்வாறு தீ விபத்து ஏற்பட்டது? மர்ம நபர்கள் யாரேனும் தீ வைத்தார்களா? என்ற கோணத்தில் மடத்துக்குளம் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை பழனி தேசிய நெடுஞ்சாலையில் மடத்துக்குளம் அடுத்த கிருஷ்ணாபுரம் பகுதியில் சாலையின் இருபுறமும் முற்றிலும் குப்பைகள் மற்றும் முட்செடிகள் அதிகளவு இருந்த நிலையில் இன்று எதிர்பாராத விதமாக இப்பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது.

இதனால் அப்பகுதியில் புகைமூட்டம் ஏற்பட்டதால் அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் கடும் பாதிப்படைந்தனர்.



இதுகுறித்து உடுமலை தீயணைப்புத் துறையினர் தகவல் தெரிவித்த நிலையில் சம்பவ இடத்திற்கு உடுமலை நிலைய அலுவலர் லட்சுமணன் தலைமையில் வந்த தீயணைப்பு துறையினர் சுமார் ஒரு மணி நேரம் போராடி கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த தீயை கட்டுப்படுத்தினர்.

இந்த நிலையில் இப்பகுதியில் குப்பைகள், முட் செடிகளில் எவ்வாறு தீ விபத்து ஏற்பட்டது யாரேனும் தீ வைத்தார்களா என்ற கோணத்தில் மடத்துக்குளம் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். பழனி தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் இப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

பிரதமர் மோடி கோவை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கேரளா புறப்பட்டார்

பிரதமர் Narendra Modi கேரளாவில் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கோவை விமான நிலையம் வந்தடைந்தார். BJP மாநில தலைவர் Nayinar Nag...

கோவையில் குறுத்தோலை ஞாயிறு விழா: கிறிஸ்தவர்கள் பக்திப் பரவசத்துடன் புனிதப் பேரணி

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள தூய மைக்கல் ஆதித்தூதர் பேராலயத்தில் குறுத்தோலை ஞாயிறு விழா கொண்டாடப்பட்டது. திரளான இறைமக்க...

முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டங்களால் பொள்ளாச்சி திமுக கோட்டையாக மாறும் - வேட்பாளர் கே.நித்தியானந்தன்

பொள்ளாச்சி தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் K. Nithyananthan, முதல்வர் M.K. Stalin திட்டங்களால், குற...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...