மடத்துக்குளத்தில் இயற்கை விவசாயம் குறித்து கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் - விவசாயிகள் பங்கேற்பு

இயற்கை விவசாயத்தில் பல வருடங்கள் ஈடுபட்டு வெற்றி பெற்ற உடுமலை விவசாயி ஜெகதீசன், கடத்தூர் கலைச்செல்வன் மற்றும் பலர் இயற்கை விவசாயம் ஏன் செய்ய வேண்டும், இயற்கை விவசாயத்தால் ஏற்படும் நன்மைகள் குறித்து விவசாயிகளுக்கு தெளிவாக எடுத்துரைத்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பகுதியில் தமிழ்நாடு வேளாண்மை துறை சார்பில் பாரம்பரிய வேளாண் வளர்ச்சி திட்டம் 2023-24 இன் படி இயற்கை விவசாயம் குறித்த கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நடைபெற்றது. கருத்தரங்கில மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் முத்துலட்சுமி மற்றும் பொங்கலூர் வேளாண்மை அறிவியல் நிலையம் திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ஷிலா மற்றும் பலர் இயற்கை விவசாயத்தின் சிறப்பு குறித்தும், வேளாண்மை துறையில் வழங்கப்பட்டு வரும் திட்டங்கள் குறித்தும் விவசாயிகளுக்கு எடுத்துரைத்தனர்.



இயற்கை விவசாயத்தில் பல வருடங்கள் ஈடுபட்டு வெற்றி பெற்ற உடுமலை விவசாயி ஜெகதீசன், கடத்தூர் கலைச்செல்வன் மற்றும் பலர் இயற்கை விவசாயம் ஏன் செய்ய வேண்டும், இயற்கை விவசாயத்தால் ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகள் குறித்து விவசாயிகளுக்கு தெளிவாக எடுத்துரைத்தனர்.



முன்னதாக கேழ்வரகு, குதிரை வாலி அரிசி உள்ளிட்ட தானியங்களின் கண்காட்சி மற்றும் தேங்காய் எண்ணெயில் இருந்து தயாரிக்கப்படும் உணவு பொருட்கள் மற்றும் உடலுக்கு நன்மை பயக்கும் அரிசி வகைகள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.

சுமார் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் கண்காட்சியை கண்டு களித்தனர். இயற்கை விவசாயம் குறித்த கண்காட்சி மற்றும் கருத்தரங்கின ஏற்பாட்டினை மடத்துக்குளம் வேளாண்மை உதவி இயக்குனர் தேவி மற்றும் உதவி வேளாண் அலுவலர்கள் செய்திருந்தனர்.

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...