பொள்ளாச்சி அருகே ரமணமுதலிபுதூர் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் தேர்தலில் புதிய துணைத் தலைவராக திலகவதி தேர்வு

மறைமுக வாக்கெடுப்பில் ஒன்பது வார்டு உறுப்பினர்களில் ஆறு வார்டு உறுப்பினர்கள் மட்டும் கலந்து கொண்டு ரமணமுதலிபுதூர் ஊராட்சி மன்ற துணைத் தலைவராக திலகவதியை ஒரு மனதாக தேர்வு செய்தனர்.


கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள ரமணமுதலிபுதூர் ஊராட்சியில் 4 ஆயிரத்துக்கும் மேற்ப்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். மொத்த வார்டு எண்ணிக்கை ஒன்பது ஆகும். தி.மு.கவை சேர்ந்த இரண்டு பேர், அதிமுக சேர்ந்த ஏழு பேர் வார்டு உறுப்பினர்களாக உள்ளனர்.

கடந்த ஊராட்சி மன்ற தேர்தலில் அதிமுகவை சேர்ந்த தனபாக்கியம் என்பவர் தலைவராக தேர்ந்து எடுக்கப்பட்டார். துணைத்தலைவராக அதிமுகவை சேர்ந்த சரவணக்குமார் இருந்து வந்ததார். தனது தனிப்பட்ட காரணங்கால் கடந்த 18ம் தேதி தீடீர் ராஜினமா செய்தார். இதனால் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான மறைமுகத் தேர்தல் நடத்த மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி உத்திரவின் பேரில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஆனைமலை வட்டார வளர்ச்சி அலுவலர் ஆனந்த் மற்றும் மோகன்பாபு தலைமையில் நேற்று மறைமுக வாக்கு எடுப்பு நடந்த பட்டது.

இதில் ஒன்பது வார்டு உறுப்பினர்களில் ஆறு வார்டு உறுப்பினர்கள் மட்டும் கலந்து கொண்டு திலகவதியை ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார். ஆனைமலை துணை கண்காணிப்பாளர் ஶ்ரீ நிதி மேற்பார்வையில் ஆனைமலை காவல் நிலைய ஆய்வாளர் குமார் தலைமையில் கோட்டூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் நாகராஜ், ஆய்வாளர் வள்ளியம்மாள் மற்றும் போலீசார் பாதுகாப்பணியில் ஈடுபட்டு வந்தனர்.

Newsletter

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் பெரும் தீ விபத்து: 100 ஊழியர்கள், 36 வாகனங்களுடன் மாநகராட்சி போராட்டம்

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் 3.1 ஏக்கரில் ஏற்பட்ட தீ விபத்தை கட்டுப்படுத்த மாநகராட்சி ஆணையர் தலைமையில் 100 பணியாளர்கள்,...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் இந்திய அறிவு மரபு அடிப்படையில் வரலட்சுமி பூஜை சிறப்பாக நடைபெற்றது

கற்பகம் அகாடமி ஆஃப் ஹையர் எஜுகேஷன் பல்கலைக்கழகத்தின் இசைத்துறை மற்றும் நடனத்துறை சார்பில் வரலட்சுமி பூஜை இந்திய அறிவு மர...

கோவையில் 1,400 போதை மாத்திரைகள், 300 கிராம் கஞ்சா பறிமுதல் - கணவன், மனைவி கைது

கோவைபுதூர் பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கணவன், மனைவி இருவரை குனியமுத்தூர் போலீசார் கை...

கோவை வேளாண் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்தில் தொழில்துறை களப்பயணம்

கோவை வேளாண் பொறியியல் கல்லூரியின் 56 B.Tech மாணவர்கள் அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்திற்கு தொழில்முறை களப்பயணம் மேற்கொண்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் காலை 11 மணி...

கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்க...