கற்பகம் இன்னோவேஷன் மற்றும் இன்குபேஷன் கவுன்சில் மற்றும் ஸ்டார்ட்அப் டிஎன் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

கற்பகம் கல்வி குழுமத்தின் தலைவர் டாக்டர் வசந்தகுமார் அவர்களால் தொழில்நுட்பத் துறை சார்பில் டிஎஸ்டி இக்னிஷன் திட்டத்தின் பெயரில் ஏழு தொழில்முனைவோர்களுக்கு மொத்தத்தொகையாக இருபத்தைந்து லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.


கோவை: கற்பகம் இன்னோவேஷன் மற்றும் இன்குபேஷன் கவுன்சில்(Karpagam Innovation and Incubation council) மற்றும் ஸ்டார்ட்அப் டிஎன்(Startup TN) இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.



இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் ஸ்டார்ட்அப்களை ஆதரிப்பது மற்றும் புதுமைகளை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டது.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை சார்பில்(DST) டிஎஸ்டி இக்னிஷன் திட்டத்தின்( Ignition grant) பெயரில் ஏழு தொழில்முனைவோர்களுக்கு இருபத்தைந்து லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. இது போன்ற மானியங்கள் கண்டுபிடிப்பாளர்களை ஆதரிப்பதிலும் அவர்களின் யோசனைகளை யதார்த்தமாக(Prototype) மாற்ற உதவுவதிலும் முக்கியமானதாக இருக்கும்.

கற்பகம் இன்னோவேஷன் மற்றும் இன்குபேஷன் கவுன்சில் (KIIC) ஆனது Startup TN, TANCOM, STPI (Software Technology Parks of India) மற்றும் Department of Bio technology, FOE, KAHE உடன் இணைந்து “இம்பைரத்தான்”(Impairathon) என்கிற தேசியஅளவிலான நிகழ்வை நடத்த உள்ளது ”இம்பரத்தான் இன் நோக்கம், ஆராய்ச்சியாளர்கள், மாணவர்கள் மற்றும் தொழில்முனைவோரை ஒன்றிணைத்து மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்புத் தேவைகள் தொடர்பான பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதாகும்.

இம்பைரத்தானுக்கான போஸ்டரை, சிவராஜா ராமநாதன் CEO, StartupTN அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார்.



நிகழ்ச்சியில் கற்பகம் கல்விக் குழுமத் தலைவர் டாக்டர் வசந்தகுமார், கற்பகம் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் பி.வெங்கடாசலபதி, கற்பகம் பல்கலைக்கழகப் பதிவாளர் டாக்டர்.எஸ்.ரவி, Startup TN இன் பணி இயக்குனர் & தலைமை நிர்வாக அதிகாரி சிவராஜா ராமநாதன், டாக்டர்.வி.ஜினுபாலா, கூடுதல் இயக்குனர், சாப்ட்வேர் டெக்னாலஜி பார்க்ஸ் ஆஃப் இந்தியா, StartupTN Team லிருந்து சக்திவேல், சி.காயத்ரி மற்றும் எஸ்.ராஜசேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.



எஸ்.பிரபாகரன் தலைவர் மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளர் KIIC, தனசேகர், மேலாளர் KIIC, டீன் மற்றும் பேராசிரியர்களும் உடன் இருந்தனர். கற்பகம் கல்விக் குழுமத் தலைவர் டாக்டர் ஆர். வசந்தகுமார் பேசுகையில், சந்தை தேவைகளை நிவர்த்தி செய்வது மட்டுமல்லாமல், சமூகம் மற்றும் ஒட்டுமொத்த தேசத்திற்கும் சாதகமான பங்களிப்பை வழங்கும் தீர்வுகளை உருவாக்குவதன் முக்கியத்துவத்தை பகிர்ந்து கொண்டார்.

ஸ்டார்ட்அப் TN ஐச் சேர்ந்த சிவராஜா ராமநாதன் பேசுகையில் சுயமரியாதை, உள்ளுணர்வு மற்றும் அறிவிற்கான (தேடலில்) தேடுதல் ஆகியவை தொழில்முனைவோர் வெற்றிக்கு உண்மையில் முக்கியமானதாக இருக்கும். இந்த குணங்கள் பெரும்பாலும் வெற்றிகரமான தொழில்முனைவோரிடம் காணப்படுகின்றன என கூறினார்.

இறுதியாக கற்பகம் கல்வி குழுமத்தின் தலைவர் டாக்டர் வசந்தகுமார் அவர்களால் தொழில்நுட்பத் துறை சார்பில்(DST) டிஎஸ்டி இக்னிஷன் திட்டத்தின்( Ignition grant) பெயரில் ஏழு தொழில்முனைவோர்களுக்கு Startups) மொத்தத்தொகையாக இருபத்தைந்து லட்சம் (Rs 25 lakhs) ரூபாய் வழங்கப்பட்டது.

கற்பகம் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர்.ஸ்ரீதர் முத்துசாமி, என்.சம்பத் குமார், பட்டுத்தடம் பிரைவேட் லிமிடெட், விவேகானந்த் காமராஜ், கோகோ விஏபி பிரைவேட் லிமிடெட்டின் டாக்டர்.ஜே.சர்சில் ஏஞ்சல் ஆண்டனி ராஜ், டாக்டர்.சக்கரபாளையம் எம்.மகாலிங்கம், டாக்டர்.எல்.கார்த்திக் மற்றும் பிரபுகுமார் ஆகியோர் மொத்த மானியத் தொகையான இருபத்தைந்து லட்சத்தைப் பெற்றனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...