தாராபுரம் அருகே தேர்பாதை பகுதியில் உள்ள மதுபான கடை அகற்றக் கோரி பொதுமக்கள் போராட்டம்

தேர்பாதை என்ற இடத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டு மதுபான கடையை உடனடியாக அகற்ற வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு உத்தரவு வந்த பின்பும் மதுபான கடையை அகற்றாமல் காலம் தாழ்த்தி வருவது வருத்தம் அளிப்பதாக அவர்கள் புகார் தெரிவித்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள தேர்பாதை என்ற இடத்தில் உள்ள மதுபான கடை 38 30 இந்த கடை கடந்த பல வருடங்களாக செயல்பட்டு வருகிறது.



தேர் பாதை தொகுதியை சேர்ந்த பொதுமக்கள் மதுபான கடை போராட்டத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து தாராபுரம் சட்டமன்ற உறுப்பினரும், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சருமான கயல்விழி செல்வராஜ் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காக இந்த பகுதிக்கு வருகை புரிந்த போது பொதுமக்கள் அமைச்சரை முற்றுகையிட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து அமைச்சர் இந்த மதுபான கடையை வேறு இடத்திற்கு மாற்றி தருகிறேன் என உத்தரவளித்ததின் பேரில் அப்போது பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதை தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தேர் பாதையில் உள்ள 3830 என்ற மதுபான கடை அகற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. உத்தரவின் அடிப்படையில் இந்த கடை மோளரபட்டி என்ற கிராமத்தில் அமைவதற்கு தற்போது ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

இதனை தொடர்ந்து மோளரபட்டி கிராமத்தைச் சேர்ந்த கிராம மக்கள் நேற்று இரவு எங்களது பகுதிக்கு மதுபான கடை வேண்டாம் எனக்கோரி இரவு நேரத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



தொடர்ந்து இன்று தேர்பாதை என்ற இடத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் மதுபான கடையை உடனடியாக அகற்ற வேண்டும் என கூறி வருகின்றனர். அரசு உத்தரவு வந்த பின்பும் மதுபான கடையை அகற்றாமல் காலம் தாழ்த்தி வருவது வருத்தம் அளிப்பதாகவும் இந்த கடையை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் எனக் கூறி சுமார் 6 மணி நேரமாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...