கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தேர்தல் பணிக் குழுக்களுக்கான பயிற்சி கூட்டம்

நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் தேர்தல் பணிக் குழுக்கள் எவ்வாறு செயல்பட வேண்டும்?, அவர்களுக்கு வகுக்கப்பட்டுள்ள நெறிமுறைகள் என்னென்ன? கட்சியினரையும், பொதுமக்களையும் எவ்வாறு அணுக வேண்டும் என்பது குறித்தான பயிற்சி வகுப்பு இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.


கோவை: நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதற்கான பணிகள் துவங்கி நடைபெற்று வருகின்றன. அரசு சார்பில் தேர்தல் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மத்திய ரிசர்வ் போலீசாரும் வாகன சோதனை உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.



இந்நிலையில் தேர்தல் பணிகளுக்காக 90 குழுக்கள் கோவை மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ளன. இது தவிர மண்டல குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுக்களுக்காக அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் அவர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும்?, அவர்களுக்கு வகுக்கப்பட்டுள்ள நெறிமுறைகள் என்னென்ன? கட்சியினரையும் பொதுமக்களையும் எவ்வாறு அணுக வேண்டும் என்பது குறித்தான பயிற்சி வகுப்பு இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.



மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா, சமூக பாதுகாப்புத் திட்டத்தின் தனி துணை ஆட்சியர் சுரேஷ், கோட்டாட்சியர் உள்ளிட்டோர் கலந்துகொண்டு குழு அதிகாரிகளுக்கு பயிற்சி அளித்தனர்.

Newsletter

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெ...