தமிழக பிசியோதெரபி மருத்துவ கவுன்சில் உருவாக்க வேண்டும் என தமிழக பிசியோதெரபி மருத்துவர்கள் மாநாட்டில் தீர்மானம்

கோயமுத்தூர் பிசியோதெரபி மருத்துவர்கள் சங்கம் சார்பில் பிசியோதெரபி மருத்துவர்களுக்கு ஏற்படும் இடையூறுகளும் சட்ட ரீதியான அணுகுமுறையும் என்ற தலைப்பில் மாநில மாநாடு நடைபெற்றது. கோவை பிசியோதெரபி மருத்துவர்கள் சங்க தலைவர் டாக்டர். ராஜா செல்வகுமார் மாநாட்டை தொடங்கி வைத்து வரவேற்று பேசினார்.


அதனைத் தொடர்ந்து மாநாடில் சிறப்பு விருந்தினராக பெங்களூர் பிசியோதெரபி மருத்துவர்கள் கூட்டமைப்பின் சார்பில் டாக்டர் ஐன்டீன் கலந்து கொண்டு பிசியோதெரபி மருத்துவர்களுக்கு ஏற்படும் இடையூறுகள் குறித்தும் அதனை சரி செய்யும் சட்ட ரீதியான அணுகு முறைகள் குறித்தும் விவாதித்தார்.

இதனைத்தொடர்ந்து பிசியோதெரபி மருத்துவத்தை ஆவனபடுத்தும் முறை குறித்து டாக்டர். ராம் பிரகாஷ் உரையாற்றினார். இதில் தமிழக பிசியோதெரபி மருத்துவ கவுன்சில் உருவாக்க தமிழக அரசை வலியுறுத்துவது, ஏழை எளியோர் பயன்பெறும் வகையில் அரசு மற்றும் தனியார் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் பிசியோதெரபி சிகிக்சையை சேர்க்க வலியுறுத்துவது, பிசியோதெரபி மருத்துவர்களை பாதுகாக்க சட்டம் இயற்ற வலியுறுத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றபட்டது.



மாநாட்டில் பிசியோதெரபி மருத்துவம் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் பணியாற்றிய சென்னையை சேர்ந்த டாக்டர் ஹரிஷ் குமார்-க்கு டாக்டர். ஏபிஜே அப்துல் கலாம் நினைவு விருதும், ஈரோட்டை சேர்ந்த டாக்டர். விஜயராஜ்-க்கு பிசியோ எக்சலென்சி விருதும் வழங்கி கௌரவிக்கபட்டனர்.

இறுதியாக பிசியோதெரபி மருத்துவம் குறித்து பொது மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பாடல் வெளியிடப்பட்டது. நிறைவாக கோயமுத்தூர் பிசியோதெரபி மருத்துவர்கள் சங்க செயலாளர் டாக்டர்.ராஜேஷ் கண்ணா நன்றி தெரிவித்தார்

Newsletter

கோவை நீதிமன்றங்களுக்கு மே 31 வரை கோடை விடுமுறை - Madras High Court உத்தரவு

கோடை காலத்தை முன்னிட்டு Madras High Court கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு மே 31 வரை விடுமுறை அறிவித்துள்ளது. விடுமுறை காலத...

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வில் 95.20 சதவீதம் தேர்ச்சி ; ஈரோடு மாவட்டம் முதலிடம்!

மாநிலத்தில் 3,412 தேர்வு மையங்களில் மார்ச் 2 முதல் மார்ச் 26 வரை தேர்வுகள் நடைபெற்றன. இதில் ஈரோடு மாவட்டம் 98.8 சதவீத தே...

பிளஸ் 2 முடிவுகள் வெளியீடு : கோவை கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் களைகட்டியது

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான மகிழ்ச்சியிலும், உயர்கல்வி கனவுகளுடனும் மாணவர்கள் உற்சாகமாக கோவையின் பல்வேறு கல்லூரிகளி...

வெள்ளியங்கிரி மலையில் பக்தர் திடீர் உயிரிழப்பு: வனத்துறை விசாரணை

கோவை வெள்ளியங்கிரி மலையில் தரிசனம் சென்ற மதுக்கரையைச் சேர்ந்த மயில்சாமி என்பவர் பூண்டி நான்காவது மலையில் உயிரிழந்து கிடந...

சத்தி சாலையில் அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து - இளைஞர் பலி

கோவை மாவட்டம் அன்னூர் சத்தி சாலையில் நேற்று மாலை அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரின் ஓட்டுநர...

கோவில்மேடு பாலகக் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி திருட்டு - சிசிடிவி காட்சிகள் வைரல்

கோவை கோவில்மேடு பகுதியில் பால் முகவர் டேவிட்டின் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி இருசக்கர வாகனத்தில் வந்து பால் பாக்கெட்...