டிஎன்பிசி குரூப் 4 தேர்வுக்கு பயிற்சிபெறும் மனுதாரர்களுக்கு இலவச மாதிரி தேர்வு - விண்ணப்பிக்க கோவை கலெக்டர் அழைப்பு

கவுண்டம்பாளையத்தை அடுத்துள்ள கோவை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் (பெண்கள்) டிஎன்பிசி குரூப் 4 தேர்வுக்கு பயிற்சிபெறும் மனுதாரர்களுக்கு இலவச மாதிரி தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி நேற்று (மார்ச்.4) வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அறிவிப்பின் வாயிலாக, கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், வன காப்பாளர் ஆகிய பதவிகள் அடங்கிய ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தொகுதி IV (GROUP IV)ல் 6244 பணிக்காலியிடங்களுக்கான தேர்வானது 09.06.2024 அன்று நடைபெறவுள்ளது.

இத்தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் கோவை, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் 12.02.2024 முதல் தொடர்ந்து நடத்தப்பட்டுவருகிறது.

அதன்படி கோவை மாவட்டத்தில் TNPSC Group IV தேர்வுக்கு பயிற்சிபெறும் மனுதாரர்கள் பயன்பெறும் வகையில் இலவச மாதிரித் தேர்வு கோவை, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் கோவை ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான பயிற்றுவிப்பு மற்றும் வழிகாட்டும் நிலையம் வாயிலாக 09.03.2024 (சனிக்கிழமை) அன்று மேட்டுப்பாளையம் ரோடு, கவுண்டம்பாளையம் அடுத்துள்ள கோவை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் (பெண்கள்) நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

தேர்வுக்கு விண்ணப்பித்த மனுதாரர்கள் தங்களது TNPSC Group IV Application form நகலுடன் 09.03.2024 (சனிக்கிழமை) அன்று காலை 9.30 மணியளவில் மேட்டுப்பாளையம் ரோடு, கவுண்டம்பாளையம் அடுத்துள்ள கோவை, அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் (பெண்கள் நடைபெறவுள்ள இலவச மாதிரித் தேர்வில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மேலும், மனுதாரர்கள் https://forms.gle/g8LgcvT4XjroSc1PA என்ற Google form வாயிலாக முன்பதிவு செய்து கொள்ளலாம் எனவும், மேட்டுப்பாளையம் ரோடு கவுண்டம்பாளையம் அடுத்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரடியாக தொடர்பு கொள்ளலாம் எனவும், அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாகவும் தொடர்பு கொண்டு, பயனடையுமாறும் தெரிவித்துள்ளார்.

Newsletter

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...

கோவை பீளமேடு 27-வது வார்டில் ரேஷன் கடை மற்றும் தூய்மைப் பணிகள் கவுன்சிலர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம், சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 27-வது வார்டு பகுதிகளில் பல்வேறு மக்கள் ந...