அப்பநாயக்கன்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மாணவர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்த நாள் வாழ்த்து

பகுதி கழக செயலாளர் அருள்குமார், மாமன்ற உறுப்பினர் கற்பகம் உள்ளிட்ட பகுதி கழக, வட்ட கழக நிர்வாகிகள் சுமார் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு நோட்டு புத்தகம், வாய்ப்பாடு, பேனா, பென்சில் உள்ளிட்ட கல்வி உபகரண தொகுப்புகள் மற்றும் இனிப்புகள் வழங்கினர்.


கோவை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 71-வது பிறந்த நாளை திமுகவினர் பல்வேறு நலத்திட்டங்களை செய்து விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 71-வது பிறந்த நாளை முன்னிட்டு கோவை வடக்கு மாவட்டம், 1-வது வட்டக் கழக திமுக சார்பாக அப்பநாயக்கன்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகில் வட்ட கழக செயலாளர் ப.இராஜசேகரன் தலைமையில் கழக கொடி ஏற்றி வைக்கப்பட்டது.



தொடர்ந்து அப்பநாயக்கன்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பகுதி கழக செயலாளர் அருள்குமார், மாமன்ற உறுப்பினர் கற்பகம் உள்ளிட்ட பகுதி கழக, வட்ட கழக நிர்வாகிகள் அங்கு பயின்று வரும் சுமார் 200-க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகளுக்கு நோட்டு புத்தகம், வாய்ப்பாடு, பேனா, பென்சில் உள்ளிட்ட கல்வி உபகரண தொகுப்புகள் மற்றும் இனிப்புகளை வழங்கினர்.



முன்னதாக பள்ளிக் குழந்தைகள் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து பாடல் பாடினர். மேலும் இன்று முதல் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை துவங்கியுள்ள நிலையில் மாமன்ற உறுப்பினர் கற்பகம் முதல் சேர்க்கையை தொடங்கி வைத்து மாணவருக்கு பரிசு வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் பிரபாகரன், பகுதி கழக நிர்வாகிகள் இராக்கிமுத்து, சண்முகசுந்தரம், சன்சோமு, தன்ராஜ், வட்ட கழக நிர்வாகிகள் அன்பழகன், உதயகுமார், உதயகுமார் (LPF) , சின்னச்சாமி, வெங்கடேஷ், சேது, பெள்ளிராஜ், ஜெயக்குமார், லிங்கசாமி, சின்னு, பிரகாஷ், ராஜ்கண்ணன், சாம்ராஜ், கனகு, சுலோச்சனா இளைஞரணியை சார்ந்த இம்ரான், சுபாஷ்கண்ணன், யஷ்வந்த், மற்றும் பொதுமக்கள் பள்ளி தலைமை ஆசிரியர் உள்ளிட்ட ஆசிரியை பெருமக்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்தில் கள்ளச்சந்தையில் மது விற்பனையா?

முக்கிய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள கோவை ரயில் நிலையம் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில், பயணி போல் அமர்ந்திருந்த நபர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வீடற்றோர் விடுதிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா IAS மத்திய மற்றும் தெற்கு மண்டலங்களில் உள்ள நகர்ப்புற வீடற்றோர் தங்கும் விடுதிகளை...

சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (03.09.2026) மின்தடை

கோவை சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை செப்டம்பர் 3ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பண...

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் சுகாதார மையம், குடிநீர் பராமரிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை, சிங்காநல்லூர் தொகுதி வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதியில் சுகாதார மையம், உப்பு நீர் குழாய் பழுது பார...

Juvenile at the Time of Assault: 21-Year-Old Sentenced to 3 Years in Coimbatore

Sathish, a 21-year-old man, has been sentenced to three years in prison in connection with a 2019 assault case in Podanu...

காங்கிரஸ் கட்சி நிகழ்ச்சிகளில் கூட்டணி தலைவர்கள் புகைப்படம்: தெளிவான வழிகாட்டுதல் கோரிக்கை

கோவை மாநகர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் S.P. சுதன் நாயக் ராஜ், காங்கிரஸ் கட்சியின் சொந்த நிகழ்ச்சிகளில் கூட்டணி கட்சி...