விதிமுறைகளை மீறி அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி விற்பனை செய்து ஏமாற்றியதாக 30க்கும் மேற்பட்டோர் ஆட்சியர் அலுவலகம் முன்பு மறியல்

கோவை வடவள்ளியில் விதிமுறைகளை மீறி அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி விற்பனை செய்த தனியார் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்ககோரி அந்த நிறுவனத்திடம் வீடு வாங்கி ஏமாந்தத 30க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக மறியலில் ஈடுபட்டனர்.


கோவையை அடுத்த வடவள்ளி ஐ.ஓ.பி காலனி பகுதியில் ஸ்ரீ தக்‌ஷா என்ற நிறுவனம் அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டி விற்பனை செய்தது. இந்த அடுக்குமாடி குடியிருப்பில் 3௦ க்கும் மேற்பட்டோர் வீடு வாங்கி குடியேறியுள்ளனர். இந்நிலையில் அந்த நிறுவனம் விதிகளை மீறி கட்டிடம் கட்டி விற்பனை செய்துள்ளதாகவும், நிறுவனம் செய்த தவறால் தங்களுக்கு தற்போது அதிகாரிகள் அபராதம் விதிப்பதாகவும் வீடுகளை வாங்கியவர்கள் புகார் கூறுகின்றனர்.

இது குறித்து அடிக்குமாடி குடியிருப்பை கட்டிக் கொடுத்த தக்‌ஷா நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாநகராட்சி நிர்வாகம்  மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகின்றது.

இந்நிலையில் இன்று நடைபெற இருந்த பேச்சுவார்த்தையிலும் தக்‌ஷா நிறுவன தரப்பின்னர் பங்கேற்கவில்லை என கூறப்படுகின்றது. இதனால் ஆவேசமடைந்த  குடியிருப்புவாசிகள் இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அடுக்குமாடி குடியிருப்பில் போதிய அடிப்படை வசதிகள் ஏதும் செய்து தரவில்லை எனவும், மின் கட்டணத்திற்கு கூடுதலாக வரி என்ற பெயரில் வசூல் செய்வதாகவும் குடியிருப்புவாசிகள் புகார் தெரிவித்தனர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து கோரிக்கைகள் குறித்த மனுவினை ஆட்சியரிடம் அளித்த அவர்கள் கலைந்து சென்றனர்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...