தமிழகத்தில் போதைப்பொருள் உற்பத்தியை தடை செய்ய வேண்டும்- பொள்ளாச்சியில் உள்ள கல்லூரி மாணவிகள் வேண்டுகோள்

மது மற்றும் போதை வஸ்துகளை பயன்படுத்துவதன் காரணமாக புற்றுநோய் பாதிப்பு ஏற்படுவதால் போதை பழக்க வழக்கங்களை தவிர்க்க வேண்டும் என கல்லூரி மாணவ, மாணவிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.


கோவை: புற்றுநோய் மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பொள்ளாச்சியில் செயல்பட்டு வரும் KM கேன்சர் மருத்துவமனை மற்றும் NGM கல்லூரி மாணவ மாணவிகள் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

போதைப் பொருள் பயன்பாடு காரணமாக மாணவ, மாணவர்கள் தங்களது வாழ்வை சீரழித்து வருகின்றனர். மேலும் மது மற்றும் போதை வஸ்துகளை பயன்படுத்துவதன் காரணமாக புற்றுநோய் பாதிப்பு ஏற்படுவதால் போதை பழக்க வழக்கங்களை தவிர்க்க வேண்டும் என கல்லூரி மாணவ, மாணவிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

பின்னர் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை பொள்ளாச்சி காவல் துணை கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் கலந்துகொண்டு கொடியசைத்து தொடங்கி வைத்தார். NGM கல்லூரியில் தொடங்கிய பேரணி பாலக்காடு சாலை, மத்திய பேருந்து, நிலையம், கோவை சாலை, புதிய திட்ட சாலை, கடைவீதி உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக போதை ஒழிப்பு மற்றும் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாதைகளை கைகளில் ஏந்தியவாறு பேரணியாக சென்றனர்.

போதை பழக்க வழக்கம் என்பது மிகவும் மோசமான செயல் அதைப் பின்பற்றாமல் இருப்பது நமது கையில் தான் உள்ளது. போதை பழக்க வழக்கங்களுக்கு கல்லூரி, பள்ளி மாணவர்கள் அதிக அளவில் அடிமையாக உள்ளனர். பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட பகுதிகளில் தாராளமாக விற்பனை செய்யப்படுகிறது. எனவே முதலில் போதை பொருள் உற்பத்தியை தடை செய்ய வேண்டும். அப்போதுதான் இது போன்ற செயல்களில் இருந்து விடுபட முடியும் மாணவிகள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை வீரகேரளத்தில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து: ₹2 கோடி பொருட்கள் எரிந்து சாம்பல்

கோவை வடவள்ளி அருகே வீரகேரளம் சின்மயா நகர் பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா பிளாஸ்டிக் குடோனில் மின் கசிவு காரணமாக தீ விபத்து...

கோவையில் நாளை (19.09.2026) காந்திபுரம் உள்பட பல பகுதிகளில் மின்தடை

கோவை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 19, 2026 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மண...

கோவையில் ஏ.டி.எம். கொள்ளை முயற்சி - துப்புரவு தொழிலாளியால் கைது

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 3-வது வீதியில் உள்ள கரூர் வைஸ்யா வங்கி ஏ.டி.எம். மையத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்...

கோவை பி.கே.புதூர் சிறுபாலத்தை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண்.92க்கு உட்பட்ட பி.கே.புதூர், பெருமாள்சாமி நகரில் அமைக்கப்பட்டுள்ள சிறுபாலத்தின...

கோவையில் விஸ்வகர்மா ஜெயந்தி விழா, தொழிலாளர்களுக்கு பரிசுகள் வழங்கல்

கோவை கவுண்டம்பாளையம் மைதானத்தில் பி.ஜே.எம்.எம். அமைப்பு சாரா தொழிலாளர் சங்கம் சார்பில் விஸ்வகர்மா ஜெயந்தி மற்றும் தேசிய...

Systemic Corruption Persists Unabated: Coimbatore Unit of Anti-Corruption Movement

The Coimbatore district unit of the Anti-Corruption Movement submitted a representation to Tamil Nadu Chief Minister C J...