உடுமலை பிரதான பைபாஸ் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றம்

பைபாஸ் சாலையில் இன்று உடுமலை நகரமைப்பு அலுவலர் உதயகுமார் தலைமையில் நெடுஞ்சாலைத்துறை, சர்வே துறை, போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் முன்னிலையில் கடைகளின் முன்பு நீட்டி விடப்பட்டிருந்த பந்தல், விளம்பர பதாகை உள்ளிட்ட ஆக்கிரமிப்புகள் ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியில் உள்ள உடுமலை-சின்னார் சாலையில் ஆரியபவன் சிக்னல் முதல் போடிபட்டி அண்ணாநகர் லூர்து மாதா பள்ளி வரை, அதே போன்று ராஜேந்திரா சாலையில் தினசரி மார்க்கெட் முதல் தளிரோடு மேம்பால இணைப்பு வரை,மேலும் தாராபுரம் சாலையில் தாஜ் தியேட்டர் முதல் பஸ் நிலையம் ரவுண்டான வரை உள்ள பகுதிகளில் சாலையின் இரண்டு புறங்களிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு உடுமலை நெடுஞ்சாலைத்துறை (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) சார்பில் முடிவு செய்யப்பட்டு நேற்று (22-2-24) வரை கெடு விதிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் இன்று முக்கிய சாலையான பைபாஸ் சாலையில் இன்று உடுமலை நகரமைப்பு அலுவலர் உதயகுமார் தலைமையில் நெடுஞ்சாலைத்துறை, சர்வே துறை, போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் முன்னிலையில் கடைகளின் முன்பு நீட்டி விடப்பட்டிருந்த பந்தல்,விளம்பர பதாகை உள்ளிட்ட ஆக்கிரமிப்புகள் ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றப்பட்டது.

இதனால் உடுமலை பைபாஸ் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. உடுமலை பகுதியில் சாலைகளின் இரண்டு புறங்களையும் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகள் முழுமையாக அகற்றப்பட்டுவருகிறது.

மீண்டும் கடைகளுக்கு முன்பு ஆக்கிரமிப்பு மேற்கொண்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. உடுமலைப்பகுதியில் பிரதான சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றும்பணி நடைபெற்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...