ஆனைமலையில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவிகள்

ஆனைமலை பேரூராட்சியில் அண்ணா நகர் அங்கன்வாடியில் பயிலும் குழந்தைகளின் உயரம், எடை ஆகியவை சரியாக உள்ளதா என மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி நேரடியாக ஆய்வு செய்தார். குழந்தைகளுக்கு வழங்கப்படும் முட்டை, சத்துணவின் தரத்தை சாப்பிட்டு பார்த்து அவர் ஆய்வு செய்தார்.


கோவை: கோவை, ஆனைமலை பேரூராட்சியில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ், ஆனைமலை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி நேற்று (பிப்.21) பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இதைத்தொடர்ந்து ஆனைமலை பேரூராட்சியில் அண்ணா நகர் அங்கன்வாடி மையத்தில் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கன்வாடியில் பயிலும் குழந்தைகளின் உயரம், எடை ஆகியவை சரியாக உள்ளதா என நேரடியாக ஆய்வு செய்தார். மேலும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் முட்டை சத்துணவின் தரத்தை சாப்பிட்டு பார்த்து ஆய்வு செய்தார்.



ஆனைமலையில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு நடத்தினார். அப்போது அங்கு பணியில் இருந்த மருத்துவர்களிடம் நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் கடந்தாண்டு மற்றும் நடப்பாண்டில் சிகிச்சை பெற்ற நோயாளிகளின் எண்ணிக்கை, நடைபெற்ற மகப்பேறு ஆகியன குறித்து கேட்டறிந்தார். பின்னர் நோயாளிகளுக்கு மருத்துவ சிகிச்சை வழங்குவதில் காலதாமதம் இருக்க கூடாது என அறிவுறுத்தினார்.



இதேபோல, ஆனைமலை வட்டம் பகுதியில் நடைபெற்ற உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தில், ஆனைமலை வி.ஆர்.டி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், ஆயக்குடி மக்கள் மன்றம் சார்பில் நடத்தப்படும் அரசு போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி மையத்தினை, கோவை மாவட்ட ஆட்சியர் திரு.கிராந்தி குமார் பாடி, நேற்று (பிப்.21) தொடங்கி வைத்தார்.



இதேபோல ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் ஆனைமலை பேரூராட்சி அலுவலகத்தில் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் சமூக பாதுகாப்பு திட்ட தனித்துறை ஆட்சியர் சுரேஷ், உதவி இயக்குனர் (பேரூராட்சிகள்) துவாரகநாத் சிங், வட்டாட்சியர் சிவகுமார் ஆகியோர் இருந்தனர்.

Newsletter

Coimbatore Court Convicts Two Govt School Teachers in Forged Salary Certificate Loan Case

The CBI Special Court in Coimbatore has sentenced Krishnagiri government school teachers T. Vinothkumar and Nithilan to...

போலி சான்றிதழ் காட்டி ரூ.25.5 லட்சம் மோசடி: இரு ஆசிரியர்களுக்கு 3½ ஆண்டு சிறை

கிருஷ்ணகிரி மாவட்டம் பாப்பனூர் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டி.வினோத்குமார் மற்றும் நிதிலன் ஆகியோர் போலி சம்பளச் சான்றிதழ் க...

கோவை முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இன்று மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச்...

கோவை வீரகேரளத்தில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து: ₹2 கோடி பொருட்கள் எரிந்து சாம்பல்

கோவை வடவள்ளி அருகே வீரகேரளம் சின்மயா நகர் பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா பிளாஸ்டிக் குடோனில் மின் கசிவு காரணமாக தீ விபத்து...

கோவையில் நாளை (19.09.2026) காந்திபுரம் உள்பட பல பகுதிகளில் மின்தடை

கோவை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 19, 2026 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மண...

கோவையில் ஏ.டி.எம். கொள்ளை முயற்சி - துப்புரவு தொழிலாளியால் கைது

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 3-வது வீதியில் உள்ள கரூர் வைஸ்யா வங்கி ஏ.டி.எம். மையத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்...